பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

செயலும் செயல் திறனும்



அத்தனைக் கூறுகளுடனும், ஒருவர் கிடைப்பது மிக மிக மிக அரிது.

ஒருவர் நாம் விரும்பும் அன்புடையவராக இருப்பார். ஆனால் அறிவில் அத்துணை விருப்பத்திற்குரியவராக இரார். இன்னொருவர். அறிவில் நம்மைக் கவரலாம். ஆனால் அன்புடையவராக இருக்கமாட்டார். அவரைத் துணையாகத் தேர்ந்துவிட்டால், அவரிடம் எப்பொழுதும் முரண்பட்டுக் கொண்டு கிடக்க வேண்டியதுதான்.

இனி, ஒருவர் நாம் விரும்பும் அன்புடையவராகவும் இருப்பார். நாம் எதிர்பார்க்கும் அல்லது மதிக்கும் அறிவுடையவராகவும் இருப்பார். ஆனால் நல்ல பண்புடையவராக இருக்கமாட்டார். ஒழுக்கக் கேடுகள் சில அவரிடம் இருக்கும் எல்லாரிடமுங் முரட்டுத்தனமாகப் பேசுபவராக இருப்பார். பழகுபவராக இருப்பார். அவரால் வேறு பிறர் நம் வினைக்குத் துணையானவர்கள், நம்பால் நல்லிணக்கம் கொள்ளத் தயக்கம் கொள்ளலாம். கடிநாய் ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பவரிடம், எப்படிப் பிறர் நெருங்கிப் பழகத் தயங்குவார்களோ, அப்படி அவருக்காக நம்மிடம் பழகுவதற்குச் சிலர் தயங்கலாம். அப்படிப்பட்ட தன்மையுடையவர்களையும் நாம் துணையாகக் கொள்ளுவது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

13. மரத்தைப் போன்றவர்கள்

இனி, இன்னொரு வகையானவர் இருப்பார். அவரிடம் அன்பிருக்கும் அறிவிருக்கும், பண்பும் இருக்கும். பொதுநல உணர்விருக்காது. தன்னலவுணர்வே, தானே அல்லது தன்னோடு சேர்ந்த சிலரே எல்லா நலன்களையும் பெற வேண்டும் என்னும் கரவுள்ளம், கடுகு உள்ளம் இருக்கும். இதுவும் ஒருவகைப் பண்புக் குறைவுதான். அவரையும் நாம் அவ்வளவு எளிதில் துணையாகக் கொண்டுவிடக் கூடாது. ஏனெனில் அன்பைவிட, ஒருவினை முயற்சிக்கு அறிவு தேவையானது. அதேபோல் அறிவைவிட ஒருவர்க்குப் பண்பு தேவையானது. பண்பு இல்லாதவர் தன்னலவுணர்வுடன் இருப்பார். தன்னலவுணர்வுள்ளவர் கொடியவராகவும் மாறுவார். எனவே ஒருவர் எவ்வளவு சிறந்தவராக இருப்பினும் அவர் பண்பில்லாதவராக இருப்பின் அவரை மரத்துக்குச் சமம் என்பார் திருவள்ளுவப் பெருந்தகை.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண் பில்லா தவர்

(997)

மக்கட் பண்பு என்பது மக்கட்கு நலம் செய்கிற பண்பு. மக்கள் அனைவரையும் ஒன்றாக மதிக்கின்ற பண்பு மக்களுக்காக உழைக்கின்ற பண்பு. அவர்களின் பொருட்டுத் தன் நலத்தை இழக்கின்ற பண்பு. இத்தகைய பண்பு இல்லாதவர் எவ்வள்வு பெரிய அறிவாளியாக இருப்பினும் அவரை நாம் மதிக்க வேண்டியதில்லை. போற்ற