பக்கம்:மருதநில மங்கை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76புலவர் கா. கோவிந்தன்



விடுத்தவர் விரகுஇன்றி எடுத்தசொல் பொய்யாகக் கடிந்ததும் இலையாய் நீ கழறிய வந்ததை

வரிதுஎற்றாய்நீ என வணங்குஇறை அவன்பற்றித்
தெரிவேய்த்தோள் கரும்புஎழுதித் தொய்யில் செய்தனைத்
புரிபு நம்ஆயத்தார் பொய்யாக, எடுத்த சொல் [தற்கோ 15
உரிதுஎன, உணராய்நீ உலமந்தாய் போன்றதை?

என வாங்கு,
அரிது.இனி, ஆய்இழாய் ! அதுதேற்றல்; புரிபுஒருங்கு
அன்றுநம் வதுவையுள் நமர்செய்வது இன்று ஈங்கே 20
தான் நயந்து இருந்தது இவ்வூராயின், என்கொலோ
நாம் செயற்பாலது இனி?”

தலைவி, தோழிக்கு அறத்தோடு நின்றது. இது. திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே (தொல்பொருள்; 128) என்னும் விதியால், மருதத்தில் குறிஞ்சி வந்தது.

1. நோக்கியும்–திருத்தியும் 2. வரி–தொய்யில்; இல்–மணல் வீடு; 3. நினையு–காதலை நினைந்து; 4. இணையள்–இன்ன உறவு உடையள்; அணையையோ–அவ்வியல்யுபு உடையையோ; 6. சேட் சென்றாய்–நெடும் பொழுது நின்றாய்; 7. பௌவம்–கடல்; சாய்–தண்டான் கோரை கொழுதி–பறித்துக் கோத; 8. கௌவை நோய் உற்றவர்–அலர் உரைக்கும் நோயுடையவர்; காணாது–பொருந்தாது என்று உணராது; 9. ஒருநிலையே–அவர்கள் கருதியவாறே; 10. ஒடுங்கி–அஞ்சி; 12. விடுத்தவர்–ஊராரால் வெறுத்து விடப்பட்டவர்; விரகு–அறிவு; 13. கழறிய–கோபித்தற்கு; 14. இறை–முன் கை; 15. தெரிவேய்–ஆராய்ந்த அழகிய மூங்கில் போலும்; 16. புரிபு–காவல் புரியும்; 17. உணராய்–உரிது என மாற்றுக–உணராது, அது ஒக்கும் எனப் பொருள் கொள்க; உலமந்தாய்–வருந்தினாய்; 19. புரிபுஒருங்கு–ஒருங்கே விரும்பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/78&oldid=1129862" இலிருந்து மீள்விக்கப்பட்டது