பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

என்று குறிப்பிடுவர். இங்ஙனம் உமையம்மையார் முப்பத்திரண்டறமும் திருவதிகையில் கண்கூடாகச் செய்தல் வேண்டும் என்று நரலோக வீரன் கருதினான் ; அங்ஙனமே முப்பத்திரண்டறங்களும் நாடோறும் நடைபெறச் செய்தான். இதனைக் கீழ்க்கண்ட செய்யுள் விளக்கும்:-

அண்ணல் அதிகையரன் ஆகம் பிரியாத
பெண்ணினல்லாள் எண்ணான்கு பேரறமும்-எண்ணி அவை
நாணாள் செலவமைத்தான்...

}} இதில் “நாணாள்” என்பது நாடோறும் என்று பொருள்படும்.

நற்பண்புகள்

இது காறும் கண்டவாற்றான் இவனது சிவபக்தி சிறப்புத் தெற்றென விளங்கும். இவனைப்பற்றிய பாடல்களினின்று இவன் ஒரு பெரு வீரன் என்றும், பெரு கொடையாளி என்றும், தன் அரசனுடைய புகழை மிகுவித்தவன் என்றும் அறிகிறோம். “தொல்லை மழை வளர்க்க வெங்கலியை மாற்றி, வழுவாமல் அறம் வளர்த்தவன்” இவன். “பொன் மழையோடொக்கத் தரும் கொடையான்” ஆகவும் இவன் திகழ்ந்தான். இவன் சமய குரவரிடத்தில் கொண்ட பக்தி, தில்லையில் திருஞான் சம்பந்தர் கோயிலுக்குப் பொன் வேய்ந்தமையாலும் திருவதிகையில் திருநாவுக்கரசருக்குக் கோயிலமைத்தமையாலும் அறியப் பெறுகின்றது. இவன் சைவ சமயத்துக்கு ஆற்றியுள்ள சிறந்த பணி மூவர் தேவரங்களையும் செப்பேடு செய்வித்தமையேயாகும். இதனால் இவன் சைவர் நெஞ்சில் நிலவுபவன் ஆவன்.