பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


என் குழந்தாய், உனது இனிய உடம்பில் உறக்கம் நிறைவு காண்கிறது.

-கா.ப


மரம் தன் இலைகளை உதிர்ப்பது போல், நிலத்தில் நான் சொற்களை உதிர்க்கிறேன். வெளிவராத என் எண்ணங்கள் உனது அமைதியில் மலரட்டும்.

- மின்

எவற்றையெல்லாம் நான் விட்டுச் செல்ல வேண்டுமோ, அவற்றையெல்லாம் நான் விட்டுவிடுகிறேன். எவற்றையெல்லாம் ஏற்க வேண்டுமோ, அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். உன்னுடன் சேர்ந்து நடை போட மட்டும் என்னை அனுமதித்திடு.

-படை

அருகே என்கிற தடைக் கல்லின் ஊடே புகுந்தாவது உன் அன்பு என்னைக் காணட்டும்.

- மின்

முள்களினூடே சிறிய மலரொன்று காணக்கிடைத்தது. உலகின் நம்பிக்கை மடிந்து விடவில்லை, என்று நான் உரக்கக் கூறிவிட்டேன்.

- நா

கடலலைகளின் மேல் இரவில் மின்னுகிற வெளிச் சம்தான் நமது பெயர்கள். பின்னர் தன் கையெழுத்தை