பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

155


நமது முழுமையில் நாம் மகிழ்ச்சியடையும் போது, பயன்களை மகிழ்ச்சியுடன் விட்டுக் கொடுப்பதும் இயல்பு தான்.

-ப.ப

இரவு இருமையாலே சூழப்பட்டிருக்கிறது, எனது அமைதி போல் உனது உறக்கமும் ஆழமானது. ஓ, காதலின் நோக்காடே, விழித்தெழு, காரணம் வாயிலைத் திறந்துவிட எனக்குத் தெரியவில்லை.

-க.கொ

மன உறுதிக்குச் சிறந்த பயன்தான் கிடைக்கிறது. ஆனால் அது கிட்டுவது கட்டுப்பாடு நிறைந்த உலகத்தில்லை, விடுதலை தவழ்ந்திடும் உலகத்தில்தான்.

-ஆ

உன் முகத்தைக் கண்டேன் என்று உணர்ந்தேன்; இருளில் எனது படகைச் செலுத்தினேன்.

--குறு

காதலே துன்பமாகிற எரியும் விளக்கை நீ கையி லெடுத்து வரும்பொழுது நான் உனது முகத்தைக் காண முடிகிறது. மகிழ்ச்சியின் உருவமே நீதான் என்று உணர்கிறேன்.

-ப.ப