பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


இரவின் மடியில் ஒரு கமுக்கமான மகிழ்ச்சி கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியால் என் நெஞ்சை நிரப்பிக் கொள்கிறேன்; நான் முழுவதும் அதை எடுத்துச் செல்கிறேன்.

-எ

நினைவுகளின் அடியோசைகளை அமைதியுடன் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கும் இரவின் சாலையைப் போன்றவன் நான்.

-ப.ப

ஆழங்காண முடியாத கடலின் நெஞ்சத்திலிருந்து வெளிப்படுகிறது பொன்மயமான குரலொன்று. கண்ணீர் புகை மூட்டத்தினூடே உன் முகம் காண முயல்கிறேன் நான்.

-ப.ப

என் தலைவனின் அரசவையில் உண்மையின் ஒளி மட்டுமே சுடர் வீசுகிறது.

-க.பா

என்னைப் பொறுத்தவரை, மாலை வானம் ஒரு சாளரம், ஏற்றிய விளக்கு, அதன் பின்னே ஒரு காத்திருப்பு.

-ப.ப