பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


உன் வாழ்க்கைப் பாதையிலே இருள் கவிந்திருக்கும் போது, உனது தலைக்கு மேல், வழிகாட்டும் ஒளி சுடராகவே மின்னிக் கொண்டு வரும், எனது பாடல். -வ.பி

இனிமை உடையது இவ்உலகு, நான் பெண்ணாய்ப் பிறந்ததும் இனிமை உடையதே. -நூ.பா

புரட்சி மனங்கொண்ட வீர இளைஞன் முதியவர் ஆட்சியினை அழித்திடவே இனி அடிக்கடி தோன்றுவான். - -நூ.பா

பொன் வேண்டேன் புகழ்வேண்டேன், வாழ்வதற்குத் துளி இடமே நான் வேண்டுவது. -நூ.பா

சாரளக் கோப்பில் நறுமணமல்லிகை, ஆற்றின் அக்கரையில் தோன்றிடும் இளங்காலை ஒலி - ஒளிக் கூத்து இவையே வேண்டுவன. -நூ.பா

பொன் இல்லை, பெற்றி இல்லை, புகழில்லை நான் வேண்டுவது துளி அன்பே. -நூ.பா