20
2ö
பாட்டு-தாளம்-ஆதி
இருவரும் இன்பத்தின் எல்லை எதுவெனக் காண்போம் ஈருடல் ஓருயிராய்-இணைந்தே துன்பத்தை துயரினை துரத்திட முனைவோம் துணைவனும் துணைவியுமாய்-துணிந்தே
(இருவரும் கைகோர்த்த வண்ணம் உள்ளே செல்லுகின்ற னர். பல ஆண்டுகள் ஓடி மறைகின்றன. கிழவியாக, கையிலே தடியூன்றியவண்ணம் பெருமகள் வருகிறாள்)
பாட்டு-தாளம்- ஆதி
எடுப்பு
பல்லாண்டு கழிந்தனவே-யாத்திரையில் பலவூரும் சென்றேனய்யா-என் வாழ்வினில் (பல்)
தொடுப்பு
நல்லாண்டும் பொல்லாண்டும் நடந்து முடிந்தனவே நானிலத்தின் மாறுதலால் மேனிலைக்குக் காரணமாய் (பல்)
இவ்வுலகின் வாழ்க்கையிலே எத்தனையோ புதுமைகள் இதமும் பதமுமாக ஏற்றவர்கள் வாழுகிறார் . (பல்)
பிறந்ததும் இறந்ததும் பெருமையால் சிறந்ததும் பிணிபசி மூப்புகளாய் பெற்றழியும் மக்களுடன் (பல்)
(அப்பொழுது தலைவிரி கோலமாக தளர்ந்து தள்ளாடி வருகிறாள் தலைவி. பார்த்து வியக்கிறாள் பெருமகள்)
பாட்டு-தாளம்-ஏகம்
யாரம்மா, யாரம்மா யாரம்மா நீ ? பாரம்மா, பாரம்மா, பாரம்மா நீ ?
பாட்டு-தாளம்-ஆதி
எடுப்பு
பத்துபிள்ளை பெற்றவளம்மா-ஐயய்யோ நான் பரதேசியானவள்ம்மா (பத்)
தொடுப்பு
பெற்றபிள்ளை அத்தனையும் பேணி வளர்த்துவிட
உற்ற பொருள் ஏதுமில்லை உணவில்லை உடையில்லை (பத்)
எடுப்பு
காதலித்து மணந்தவளே-கற்பரசியே! கதியென்ன நேர்ந்ததடியே? (காத)
தொடுப்பு
சாதலுக்கோ பிள்ளையடி சக்தியில்லாத தேகமிதில் ?
வேதனையில் வெந்தவளே விதிதானோ ? மதி தானோ ?
(காத)