பக்கம்:பதினாறும் பெறுக.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20

2ö

பாட்டு-தாளம்-ஆதி

இருவரும் இன்பத்தின் எல்லை எதுவெனக் காண்போம் ஈருடல் ஓருயிராய்-இணைந்தே துன்பத்தை துயரினை துரத்திட முனைவோம் துணைவனும் துணைவியுமாய்-துணிந்தே

(இருவரும் கைகோர்த்த வண்ணம் உள்ளே செல்லுகின்ற னர். பல ஆண்டுகள் ஓடி மறைகின்றன. கிழவியாக, கையிலே தடியூன்றியவண்ணம் பெருமகள் வருகிறாள்)

பாட்டு-தாளம்- ஆதி

எடுப்பு

பல்லாண்டு கழிந்தனவே-யாத்திரையில் பலவூரும் சென்றேனய்யா-என் வாழ்வினில் (பல்)

தொடுப்பு

நல்லாண்டும் பொல்லாண்டும் நடந்து முடிந்தனவே நானிலத்தின் மாறுதலால் மேனிலைக்குக் காரணமாய் (பல்)

இவ்வுலகின் வாழ்க்கையிலே எத்தனையோ புதுமைகள் இதமும் பதமுமாக ஏற்றவர்கள் வாழுகிறார் . (பல்)

பிறந்ததும் இறந்ததும் பெருமையால் சிறந்ததும் பிணிபசி மூப்புகளாய் பெற்றழியும் மக்களுடன் (பல்)

(அப்பொழுது தலைவிரி கோலமாக தளர்ந்து தள்ளாடி வருகிறாள் தலைவி. பார்த்து வியக்கிறாள் பெருமகள்)

பாட்டு-தாளம்-ஏகம்

யாரம்மா, யாரம்மா யாரம்மா நீ ? பாரம்மா, பாரம்மா, பாரம்மா நீ ?

பாட்டு-தாளம்-ஆதி

எடுப்பு

பத்துபிள்ளை பெற்றவளம்மா-ஐயய்யோ நான் பரதேசியானவள்ம்மா (பத்)

தொடுப்பு

பெற்றபிள்ளை அத்தனையும் பேணி வளர்த்துவிட

உற்ற பொருள் ஏதுமில்லை உணவில்லை உடையில்லை (பத்)

எடுப்பு

காதலித்து மணந்தவளே-கற்பரசியே! கதியென்ன நேர்ந்ததடியே? (காத)

தொடுப்பு

சாதலுக்கோ பிள்ளையடி சக்தியில்லாத தேகமிதில் ?

வேதனையில் வெந்தவளே விதிதானோ ? மதி தானோ ?

(காத)