பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hදී. தொல்காப்பியம் - பொருளதிகாரம்

இஃது உணர்வுடையது போல் இளிவரல்பற்றி வந்த தலைமகள் கூற்று

  • நின்மொழிகொண் டியானோ விடுவேன் மற் றென் மொழிகொண்

டென்னெஞ்சம் ஏவல் செயின்,' (கலித்.ககங்)

இது மறுத்துரைப்பது போல் தலைமகன் கூற்று: உவகைபற்றி வந்தது.

’’அவர் நெஞ் சவர்க்காதல் கண்டும் எவனெஞ்சே

நீயெமக் காகாதது.' (குறள் கடிகக)

இதுவும் மறுத்துரைப்பதுபோல் தலைவி கூற்று; இளிவரல்பற்றி வந்தது.

'இருளிடை மிதிப்புழி நோக்கியவர்

தளரடி தாங்கிய சென்றவெ னெஞ்சு.. (அகம் கஉஅ)

இஃது அச்சம்பற்றி வந்தது. பிறவு மன்ன.

சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச் செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும் என்பதற்குச் செய்யுள்:

'கானலுங் கழத்ாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது ஒரு நீ அல்லது பிறி தியாதும் இலனே இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தற் கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத் தண்டா துதிய வண்டினங் களி சிறந்து பறைஇய தளருந் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமால்...' (அகம், கள0)

என்பது தலைவி கூற்று. தலைவன் சுற்று வந்தவழிக்காண்க.

அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியதற்குச் செய்யுள்:

"பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப், பனிக்கடல், தூவறத் துறந்தனன் துறைவனென் றவன்றிறம்

நோய்தெற. உழப்பார்கண் இமிழ்தியோ எம்போல்க் காதல்செய் தகன்றாரை உடையை யோc (கலித் கஉக)

றவு மன்ன.