பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பொருள் 54. பொச்சாவாமை இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவமை மகிழ்ச்சியிற் சோர்வு. 531 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. 532 பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து எப்பால்நூ. லோர்க்கும் துணிவு. 533 அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. 534 முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும். 535 இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல் 536 அரியளன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின். 537 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் 538 இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. 539 உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின். 54O