பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பொருள் 97. மானம் இன்றி யமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். 961 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். 962 பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. 963 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக்கடை 964 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். 965 புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை. 966 ட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே ". எனப்படுதல் நன்று. 967 மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து. 968 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். 969 இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு. 97 Ο