பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

165


றைவா, உலகின் செல்வமனைத்தையும் தூசாக மதிக்கிற செல்வத்தின் சின்னஞ் சிறிய பகுதியை எனக்களித்திடு.

-க.கொ

வெளிச்சத்தை நோக்கி, இருட்டு பயணிக்கிறது.

-ப.ப

துவுமே செய்ய வேண்டியது இல்லாமலிருக்கும் பொழுது நான் ஒன்றுமே செய்யாமலிருப்பது, தண்ணிர் அமைதியுடன் இருக்கும் பொழுது, மாலை நேரத்தில் கடற்கரை எவ்வாறிருக்குமோ அது போன்று அமைதியின் ஆழத்தில் தாக்கம் யாதொன்று மின்றி இருக்கிறது.

-ப.ப

ன் நெஞ்சமே, உன் தலைவனின் புன்முறுவலை மீறித் தனித்திருந்து, அவனிடமிருந்து விலகி எவ்வாறு அலைந்து திரிய முடியும்.

-க.பா

றிய முடியாமையே நிலையான விடுதலை.

-க.கொ

ல யுகங்களிலிருந்து புறக்கணிக்கப்பட்ட, சிதறிக்கிடக்கும் பரிதாபகரமான சிந்தனைகள், என் இதயக்குகையில் ரீங்காரமிட்டு, என்னைப்பாடவே தூண்டுகின்றன.