பக்கம்:வைணமும் தமிழும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

வைணவமும் தமிழும்


(ஆ) தென்கலை ஆசாரிய பரம்பரை

(1). எம்பார் : (பிறப்பு. கி.பி. 1025); இராமாம்சம். திருப் பெரும்புதுரையடுத்த மழலை மங்கலத்தில் கமலநயனபட்டருக்கும், உடையவரின் சிறிய தாயாரான பெரிய பிராட்டியாருக்கும் திருக்குமாரராய் அவதரித்தார். தம் தாய்மாமனாகியபெரிய திருமலை நம்பியால் 'கோவிந்தபட்டர்' என்று திருநாமம் சாத்தப் பெற்றார். யாதவப்பிரகாசரிடம் உடையவருடன் வேதாந்தங்களைக் கற்று வந்தார். இவர் கங்கையில் நீராடும்போது ஒர் இலிங்கம் கையில் வந்து சேர ‘உள்ளங்கை கொணர்ந்த நாயனார்' என்று திருநாமம் சாத்திக் காளத்தியில் வழிபாடு செய்து வந்தார். இவரைத் திருமலை நம்பி திருத்திப் பணி கொண்டார். இவரை 'இராமாநுச பாதசாயை' என்றும் சொல்லுவர். ஆசாரியர் ‘எம்பெருமானார்' சீடர்கள் கூரத்தாழ்வான் குமாரர்களாகிய பெரிய பராசரபட்டரும், சீராமப்பிள்ளையும். வயது105.

(2). பட்டர் : (பிறப்பு. கி.பி. 1062); பராசாரம்சம். திருவரங்கத்தில் கூரத்தாழ்வானுக்கும், கூரத்தாண்டாளுக்கும் திருமகனாக அவதரித்தார். திருநட்சத்திரம்: வைகாசி அனுஷம் வேறு திருநாமங்கள் : 'பெரிய பட்டர், பராசாபட்டர், வேதாந்தாசாரியர் பட்டர், திருவரங்கப்பெருமாள் பட்டர்'. ஆசாரியர், எம்பார். கூர்மையான அறிவுடைய இவரைப்பற்றிய குறிப்புகள் வைணவ உரைகளில் வருகின்றன. 'பட்டர் நிர்வாகம்' என்பது மிகுப்புகழ் பெற்றது. எம்பெருமானாரின் கட்டளைப்படி விஷ்ணு சகஸ்ரநாமத்திற்குப் பேருரை வகுத்த பெருமகனார். திருநெடுந்தாண்டகத்தின் ‘மைவண்ண