பக்கம்:நூறாசிரியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

நூறாசிரியம்


மெய்ந்நூல் நின்ற மேலோர் பாடு - மெய்ம்மையான நூற்களைக் கற்று, உணர்ந்து, அடங்கி நின்ற சான்றோர் வினைப்பாடு, படுதல்பாடு, படுதல்அழுந்துதல்-அழுந்தி அறிந்த அறிவைச் செயற்படுத்தல்.

ஊருணி மருங்கில்.அதுதணிப்பது அக் கடனே! ஊரால் உண்ணப்படுகின்ற நீர் நிலைக்குப் பல வழிகளையும் வகுத்துக் கொண்டு வரும் நீர் வேட்கை உடையவர்போல், அறிவு வேட்கை கொண்டு வருவோர்க்கு அறப்புனல் அருந்தக் கொடுப்பது அச்சான்றோரின் கடன்.

நீர்வேட்கை உடலது; அறவேட்கை உயிரது. உடல் கனலால் காய்ச்சப் பெறின் நீர்வேட்கை மிகும். உயிர் மறவுணர்வால் காய்ச்சப்பெறின் அறவுணர்வு வேட்கை மிகும். அறவுணர்வு-மெய்யறிவுணர்வின் பருநிலை.

இத்தகைவோரே என்றும் வாழுநர் என்று கூட்டுக.

இது, மெய்யறிவு வேட்கையினையும் அவ்வேட்கை தணிக்கும் சான்றோர் இத்தகைமையினார் என்பதையும், அவர் வாழும் நாடும். பேசும் மொழியும், ஏந்தும் கொடியும், பேணும் அரசும், கொளுவும் நாகரிகமும், தழுவும் பண்பாடும், தோன்றும் மன்பதையும் எத்தன்மையுடையவாயிருப்பினும், அவர் தாம் பிறருக்கு மெய்யறிவு கொளுத்தி உய்வித்தலையே தம் கடமையாகக் கொண்டிருத்தலையும், அதன் பொருட்டே அவர் முக்காலத்தும் வாழும் தகைமை பெற்றிருப்பதையும் எடுத்துக் கூறவந்த பாடலாகும்.

இது, பொதுவியல் என்திணையும், பொருண்மொழிக் காஞ்சி என் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/58&oldid=1221671" இலிருந்து மீள்விக்கப்பட்டது