பக்கம்:நூறாசிரியம்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

நூறாசிரியம்


நன்முயற்சிகளை மேற்கொண்டு வாழ்தலே சிறந்த மாந்த வாழ்க்கை யாதலின் அத்தகைய முயற்சியில்லாதாரை மாக்கள் என்றார். பாடு முயற்சி மாக்கள்-விலங்குகள்.

அணிமைத்து ஆயினும் அஃது அறியாரே-அண்மையில் இருப்பதாயினும் அதனை அறியார்.

குளகு கொறிக்கும் பாசுடல் நெடும்புழு -இலையைக் கடித்து உண்ணும் பசுமையான நீண்ட உடலையுடைய புழு,

கொறித்தலாவது ஒவ்வொன்றாகக் கடித்துத் தின்னுதல். கடித்தலைக் குறிக்கும் கறித்தல் என்னுஞ் சொல் சிறிய பொருள் வேறுபாட்டின் பொருட்டுக் கொறித்தல் என்று ஆகியுள்ளது.

குளகு இலை.

இணர்நறும் தேறல் அறியாது ஆகின்று - பூவில் உள்ள நறுவிய தேனை அறியாததாக இருக்கின்றது.

இணர் மலர் நறும் சிறந்த தேறல் தேன்.

கெடிறு இனம் எச்சம் ..... முப்பொழுது இலையே மீனினம் எச்சிலை. விழுங்குவது அல்லாமல் முத்தை உண்பது முக்காலத்திலும் இல்லை.

முக்காலத்திலும் இல்லை யென்றது எக்காலத்திலும் இல்லை என்றவாறு, முற்றுமை தொக்கது.

கெடிறு-மீன். எச்சம் எச்சில், அயிறல் உண்ணுதல்,

வித்தும் வீசலின் விளைகொள்ளதே - வீசியெறியப் பட்டால் வித்தும் முளைக்காது.

முயன்று மண்ணை அகழ்ந்து ஊன்றி நீர்விட்டாலே முளைக்கின்ற வித்து முயற்சியின்றி மேலோட்டமாக வீசியெறியப்பட்டால் முளைக்காது என்பது முயற்சி பற்றியே ஈண்டுக் கூறப்பெறுதலின் இயற்கைச் சூழல் வாய்த்துழி முளைத்தல் ஈண்டுப் பொருளன்றாம்.

அத்தகு விளைவும் அடிப்பற்றாதே. ஒரோ வழி அவ்வித்து முளைத்தாலும் வேர்விடாது.

எப்பொருள் மருங்கும் அப்புடைப் பயனே எப்பொருளிடத்தும் முயற்சியினிடத்துப் பயனே கிட்டும்.

மருங்கு புடை என்பன இடம் பொருள் பற்றியன.

ஒடு அவிழ்செய்ய ஒளிதரு மணிப்போல் - சிப்பியின் ஒடு உடைந்தக்கால் ஒளிவீசுகின்ற முத்துப்போல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/400&oldid=1209693" இலிருந்து மீள்விக்கப்பட்டது