பக்கம்:நூறாசிரியம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

நூறாசிரியம்


அறப்பூண் விளங்கிய ஆகம் பனிப்- வாழ்வறத்தின் சிறப்பால் விளங்கி நின்ற பெருமிதம் தாங்கிய மார்பகம், விடுகின்ற கண்ணிரால் நனைந்து குளிர

மறப்பூண் - குளிர மறவுணர்வுக்கே சிறப்புத்தோன்றுமாறு நின்ற மகனைப் பெற்றெடுத்த வயிறு, அவனிட்டிய புகழால் குளிர்ச்சி பெறுமாறு:

ஆய்நினக் குரியன் - தாயாகிய உனக்கென உரியவன்.

அனைவர்க்கு மாகிய- அனைத்துத் தமிழர்க்கும், அவர் மொழியைக் காத்ததால், கொண்டாடுதற்கு உரியவன் ஆகிய

இளங்கிளர் உணர்வின் ஏந்தலன்- இளமை கிளர்ந்தெழும் உணர்வினால் சிறந்தோன்.

உளங்கிளர் மாக்கதை உள்ளி - உளத்தைக் கிளர்ச்சியுறச் செய்யும் அவனுடைய பெருமை மிகு கதையை எண்ணி,

தாயே! - தாயாகிய நீயே.

‘இளமை கிளர்ந்தெழுகின்ற உணர்வுடைய ஏந்தலன் தாயே! தந்தையற்ற நின் ஒரு தனி மகனை, அவனையொத்த மாணவர்களுள் கல்வியான் முதலிடத்தே வருமாறு கலைக்கழகத்துள் சேர்த்தினை. அவன் தமிழ் காக்கும் போராட்டத்துள் தலைநின்று, வேட்டெஃகத்தால் சுடப்பெற்றுத் தமிழ் மொழியின் பெருமையை உயர்த்தி, நின் மனம் வருந்தும்படியும், நின் வயிறு குளிரும்படியும் வீரனாகி உயிர் துறந்தான். அவ்வழி, நினக்கு மட்டுமே உரியவனாகியிருந்த அவன் தமிழர் அனைவர்க்கும் உரியவனாகிப் பெருமை பெற்றான். உள்ளத்தைக் கிளர்ந்தெழச் செய்யும் இப்பெருமையுடைய அவன் வீர வரலாற்றை நினைந்து, வெற்றியுணர்வால் பெருமிதம் கொள்ளும்படி, அவன் மறைவால் துயருறும் நின் நெஞ்சத்தைக் தேற்றிக் கொள்வாயாக!’ என்று, தமிழ்க்கென உயிர் செகுத்தோனது தாயைத் தெருட்டிக் கூறியதாகும் இப்பாடல்.

இது, செந்தமிழ்த் தும்பை என்தினை மாணவவென்றி என் துறையுமாகும்.

திணை, புனைந்த புதியது. என்னை, மாணவனாகி, நிறை பருவத்தேயே, வீரனாகிப் புகழ் வென்றானைப் பாடியதாகலின் மாணவவென்றி ஆயிற்று என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/274&oldid=1221135" இலிருந்து மீள்விக்கப்பட்டது