பக்கம்:நூறாசிரியம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

நூறாசிரியம்


80 இளநகை காண்குவன்


அடைவா யெஃகம் வலிகடை புடைப்பினும்
நடைமா றாதா யீண்டு கடுகல்
குவித்த அறுகொடு மென்புகை மணக்க
அவியற் காணம் நினைதியோ யானுந்
திதலைப் பொன்பொறி சுருக்கத் தொடுங்கும் 5
புதல்வற் பயந்த புனிற்றிள வயிற்றோள்
குளம்பொலி மடுத்துப் பூக்கும்
இளநகை காண்குவ னின்னொடு விரைந்தே!

பொழிப்பு:

வாயின்கட் பொருந்திய கடிவாளத்தை இழுத்தலானே கடைவாய் வீங்கப் பெறினும் செலவில் மாற்றமில்லாதோய் இவ்வாறு நீ விரைதல் என்னை? குவித்து வைக்கப்பெற்ற அறுகம் புல்லொடும் , மெல்லிய ஆவிமணங் கமழ அவிக்கப்பெற்ற கொள்ளினையும் நினைக்கின்றனையோ? யானும் நின்னொடு விரைந்து சென்று, தேமலாகிய பொன்னிறப்புள்ளிகள் தோற் சுருக்கத்தின் கண் மறைகின்ற, மகனைப் பெற்ற ஈன்றணிமையுடைய வயிற்றினளாகிய தலைமகள் நின் குளம்பு எழுப்பும் ஒலியைச் செவிமடுத்து மலரும் புன்னகையைக் காண்பேன்.

விரிப்பு:

இப்பாடல் அகப்பொருள் சார்ந்தது.

தலைமகன் ஒருவன் சேய்மைக்கண் சென்று மேற்கொண்ட செயலை நிறைவேற்றி மீளுங்கால் தான் இவர்ந்து வருங்குதிரை கடிவாளத்தை இழுத்துப் பிடிப்பினும் நடைதளராது விரைந்து செல்லக் கண்டு அதனை நோக்கித் தீனியை நினைந்து இவ்வாறு விரைகின்றனையோ, யானும் நின்னொடு விரைந்து சென்று நின் காலடியோசையால் என் வரவுணர்ந்து மகிழும் தலைமகளின் புன்னகையைக் காண்பேன் என்று கூறுவதாக அமைந்தது இப்பாட்டு,

அடைவாய் எஃகம் வலி - வாயின்கட் பொருந்திய கடிவாளத்தை இழுத்தலானே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/370&oldid=1209386" இலிருந்து மீள்விக்கப்பட்டது