பக்கம்:நூறாசிரியம்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

நூறாசிரியம்


நெருப்பு வாளாவிராது; நாட்டவர் திரண்டெழுந்து போராடும் நாளும் ஒன்று உண்டு என்று இப்பாட்டின் மூலம் தெளிவுறுத்துகிறார் பாவலரேறு.

வாழி நெஞ்சே மருளாய் பெரும வாழி மனம் மயங்கற்க!

பெரும என்பது தோன்றா எழுவாய், மருள் மயக்கம். நெஞ்சு மருளாயாய் வாழி எனினுமாம்.

அருள்அற - அருளுணர்வு இன்றி.

யாருக்குந் தீங்கு செய்யாமையாகிய அருளுணர்வு இன்றி என்றவாறு:

இருள் தோய் வழக்கின்-ஆணவம் பொருத்திய வழக்கத்தினை யொட்டி

தாம் யாது நினைப்பினுஞ் செய்யலாம் என்னுஞ் செருக்கான போக்கையொட்டி இருள்-ஆணவம்.

இனநலந் தீய்க்கும் - ஒருவரது தனிநலத்தை மாய்ப்பது மட்டுமல்லாது அவரால் கிட்டும் பொதுநலத்தையும் அழிப்பவரான

தந்நலத்தின் பொருட்டு இனநலத்தையும் அழிப்பவர் என்றார்.

நெறியவர் - நெறிப்பட ஒழுகாது தாம் மேவன செய்யும் கீழ்மக்கள்.

செல்வக் குறியெதிர் நினைந்து - செல்வமாகிய கைம்மாறு கருதி

குறியெதிர்வு கைம்மாறு

பொறியில் மாக்கள் - மணப்பொறி யில்லாத விலங்குகள். ஐம்பொறிகள் பெற்றிருப்பினும் ஆறறிவதுவே அவற்றொடு மனனே என்றாங்குச் சிறப்புடையதான மனப்பொறியில்லாமையால் பொறியில் மாக்கள் என்றார்.

மாக்கள் மக்கள் வடிவிலிருக்கும் விலங்குகள். அல்லது ஐயறிவே பெற்ற மக்கட் பிறப்பினர்.

புன்செயல் விஞ்சும் பெற்றியர்ஆகி - இழிசெயலினும் மேம்பட்ட தீவினை புரியுந் தன்மையுடையவராகி.

பெற்றி தன்மை

பெரியோர்க்கு உழத்தல் - பிறரால் செய்தற்கு அரிய நற்பணியைச் செய்பவரான பெரியோர்க்குத் துன்பம் விளைவித்தல்.

பெரியார் பிறரால் செய்தற்கு அரியன செய்வார்.

செயற்கு அரிய செய்வார்பெரியர்’ என்றார் , மொழிநூன் மூதறிஞர் பாவாணர் மேற்கொண்ட அரும்பணியாவது "செந்தமிழ்ச் சொற்பியல் அகரமுதலி" உருவாக்கும் பெரும் பணியாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/404&oldid=1211217" இலிருந்து மீள்விக்கப்பட்டது