424
நூறாசிரியம்
மணலுள் ஊன்றிய மரம்போல
கணத்துட் சாவது காவலை வீழ்த்தே!
15
நெடுங்கல் அடுக்கத்துக் கொடுங்கற் பிளவுற
முகம்படர்ந் தெழுந்த சேண்துங்கு பலவின்
பருங்கனி வாங்கிய கருவிரற் கடுவன்
அயலுறை இளமான் அருந்தக் கொடுக்கும்
முதுபுகழ்ப் பறம்பின் நெருக்கத் தீரே!
5
ஒக்கல் நெடும்பசி களைதல் வேண்டித்
தக்கார் குறிப்பின் புக்கார் பலரே!
யானறி கிலனவ் ஆன்வளர் வாழ்வே!
தானுங் கிளையும் ஆர்தல் நினையாது
குடியும் மொழியும் புரத்தல் வேண்டி
10
ஆறுயல், முனைந்தே ஊறுபல உழன்றும்
மாறுகொள மன்னென் மனனே..மயர்வறத்
தேர்வுறு திறனதன் திறனே! ஒள்ளியர்
பழுதறு கொள்கை பற்றெலென் றுணையே!
அறம்பாய் செய்யுள் நெறிபல வித்துந்
15
திறந்தெரிந்து உய்த்தலும் ஆறே!
மறந்திலா நன்றி மதித்தலென் கடனே!
16
பசுந்தழை பொடிந்து விசும்ப ளாவி
நிலவொளி நிழலா விலவி மைர்ந்தே
அக்கூ வென்றிய அழற்கண் ஆந்தை
உட்கோ ளுரைக்குவென் கேண்மோ ஈண்டே
உண்ணுவன் கொல்லோ உறங்குவன் கொல்லோ
5
திண்ணெதிர் நினைவின் எம்மொடு வதியும்
மனையொடு மகிழ்வேன் கொல்லோ தினைத்தனை
வாழ்வென் காலமும் வீழ்ந்துபடா தாழ்ந்து