பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

39


பெரிய அரசுகளின் மேல் இறைவன் வெறுப்படை கிறான். ஆனால் ஒரு பொழுதும் சின்னஞ் சிறிய மலர்கள் மேல் அன்று.

ப. ப

துன்பமளிப்பது நீ எனக்குச் செய்யும் மரியாதை.

- நா

உனது அன்பு உருவெடுத்துள்ளது போன்று இந்த உலகத்தை நான் கருதுகிறேன். அப்பொழுது எனது அன்பும் அதற்குத் துணைநிற்கும்.

-ப. ப

செருக்கு அவனது வெறுப்புகளைக் கற்களினடியில் புதைத்து விடுகிறது. அன்பு தனது அடிபணிதலை மலர்களின் வாயிலாகத் தெரிவிக்கிறது.

- மின்

மனிதனின் செயல்களினால் இறைவன் மனந் தளர்வதில்லை என்கிற உண்மையை ஒவ்வொரு குழந்தையும் தெரிந்து வைத்திருக்கிறது.

-ப. ப

இனி என்றுமே நீ என் பாடல்களுக்கு முன்னே நிற்க மாட்டாய், அவற்றில் ஒன்றாக இருப்பாய்.

கா. ப