பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


ன் இருண்ட உள்ளக் குகைகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் உன்றன் பாடல்கள் அவைதாமா?

-க.கொ

ன் முன்னே தூசியில் தூக்கி எறிவதற்காக இரண்டு கைகளிலும் நீ என்ன பரிசு கொண்டு வந்திருக்கிறாய்.

-நா

நீ என்னைக் கொண்டு சேர்த்திருக்கிற உலகத்தை நான் விரும்புகிறேன் என்பதைக் கண்டறிய நீ விரும்புகிறாய்.

-க.கொ

விருந்தாளி எவருக்கும் வரவேற்பளிக்க எனது வீட்டில் இடமில்லையே என்று நினைத்தபடி ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தேன். ஆனால் இனந் தெரியாத மகிழ்ச்சியினால் உந்தப் பட்டுக் கதவு திறக்கப்பட்ட பொழுது உனக்கு மட்டுமன்று, உலகனைத்திற்கும் அதில் இடமுள்ளது என உணர்கிறேன்.

-க.கொ

மாரிக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் முழுமையாகப் பெருகிப் பொங்குவதைப் போல, என் உள்ளமும் சுழித்தோடுகிறது. அது போன்றதுதான் அவளிடம் எனக்குள்ள காதல்.

-கா.ப