பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


துயரத்தின் இருண்மைக்குப்பின், இன்று அதிகாலைப் பொழுது விடிகிறது. -கோ

ழப்பின் மூலம் நாம் நமது என்பதைப் பெறுகிறோம். நம்மை நாம் அளிப்பதினாலேயே உயர்கிறோம். -சா

என் நெஞ்சமே, உன் பயணத்தைத் தொடர்வாய்; இருக்க வேண்டியவை நம்முடனேயே இருக்கட்டும்.

ஏனெனில், காலை வானில் உனது பெயர் பொறிக்கப்பட்டுவிட்டது. எவருக்கும் காத்திராதே. -க.கொ

ன்மிக உலகை உருவாக்குவதில், நாம் இறைவனின் பங்குதாரர்கள். -ஆ

எல்லை, எல்லைக்கப்பால், சட்டம், விடுதலையாவற்றையும் தன்னுள்ளில் இணைத்து வைத்துள்ளது அழகு. -சா

ரவையும் பனித்துளியையும் நெருங்குவதுதான் அரும்பின் ஆசை. ஆனால் முழுமையாக மலர்ந்துள்ள மலர் அடைய விரும்புவது பகலின் விடுதலையே.

ன் நெஞ்சமே, உறையிலிருந்து வெளி வந்துவிடு, மேலே முன்னேறிச் செல்! -க.கொ