பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போருளியல் - நூற்பா டு உதி

" தான்றாயாக்... வந்து’’’ (திணை, நூற்.65.) என்பது செவிலி குரவை வழிகாட்டென்றலிற் பால்கெழு கிளவி யாயிற்று. ஏனையிரண்டும் மேல் விலக்குப. (இ}

நட்பின் நடக்கை ஆங்கலங் கடிையே."

இஃது, இறந்தது காத்தது.

(இ, ள்.) ஆங்கு - அந்நால்வரிடத்து; நட்பின் நடக்கை அலங்கடை-நட்பின்கண்ணே ஒழுகுதலல்லாத அவ்வீரிடத்தும் பால்கெழு கிளவி உரித்து (எ-று),

எனவே, நட்புச்செய் தொழுகுத் தோழிக்கும் பாங்கனுக்கும்’ 'பால்கெழு கிளவி இன்றென்றார், எனக்கொள்க. (சு)

ஆய்வுரை : இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி சுறுகின்றது. முன் காதலரிருவர்க் குரித்தாகக் கூறப்பட்ட பாற் கிளவி அவரல் லாத தோழி முதலியோாக்கும் உரியவென விதித்தலiன்.

(இ- ள்) அன்பின் பான்மை பொருந்திய கெழு தகைமைக் கூற்று தலைவி தோழி செவிலி நற்றாய் ஆகிய பெண்பாலார் நாலவர்க்கும ஒப்பவுரியதாகும்; நட்புக் கொண்டு பழகும் உணர்வு டைய உயர் திணை மக்கள லலாத அஃறிணைப்பொருள்களிடத்து.

எ-று.

நட்பின் நடக்கை ஆங்கு அல்கடை பால்கெழு கிளவி நால் வர்க்கும் உரித்து என இயையும், அல்கடையெனற்பாலது

1. இதனைத் தனிச் சூத்திரமாகக்கொள்ளாது மேலைச் சூத்திரத்தோடு இயைத்து, பால்கெழு கிளவி கால்வர்க்குமுரித்தே கட்பின டக்கை யாங்கலங்கடையே என ஒரு சூத்திரமாகக் கொண்டு,

“தம்முள் அன்புரிமையுடையராய்ப்பழகும் துன்பக் காலத்து மேற்கூறியவாறு' அறிவும் புலனும் வேறுபடக்கூறும் ஒரு கூற்றுச்சொல் தலைவி, தோழி, செவிலி, கற்றாய் ஆகிய பெண்பாலார் கால்வர்க்கும் உரியதாகும்’ எனப்பொருள் உரைத்தலே சூத்திரத் தொடரமைப்புக்கு ஏற்புடையதாகும்.

2. "கட்பின டக்கை என்பதற்கு "நட்புச் செய்தொழுகும் தோழிக்கும் பாங்கனுக்கும்' என கச்சினார்க்கினியர் கூறும் கூற்று முறையே தலைவியோடும் தலைவனோடும் கட்புச் செய்தொழுகுவோராய தோழியும் பாங்கனும் ன்த குறிப்பினதா தல் வேண்டும். அவ்விருவரும் தம்முள் கட்புச் செய்தொழுகினார் என்னுக் தவறான கருத்துக்குப் பண்டைத் தமிழிலக்கியங்களில் ஒரு சிறிதும் இட

மில்லாமையும் உணர்க.