பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


உனது ஒரு பகுதியை இறைவனுக்கும்,மற்றொரு பகுதியை வேறு யாருக்காவது அளித்தும் பிளவுபட்டிருப்பா யானால், எவையும் இடர்ப்பாடாய்ப் போய்விடும்.

-கோ

உள்ளுயிர்ப்பு உலகில் எனக்கு நம்பிக்கை உள்ளது, ஆனால் அது உலகியலிலிருந்து விலகியுள்ளது என்கிற நோக்கில்லை. அதனுடைய சூழ்ந்த உண்மைத் தன்மை யினால்தான்.

-ஆ

கொடிய புயல் காற்றுகள் வீசியடிக்கும் உலகம்தான் இசை உலகம். அதே சமயம் அழகாகிற இசையினால் கட்டுப்படுத்தப்பட்டது, அதன் கடுமை.

-ப.ப

கடவுளையன்றி வேறு எவர் ஏழைகளைக் கருத்தில் கொள்கிறவர்?

-த.ஒ

வட்டமிட்டுச் சுழலும் நாட்டியத்தின் நெஞ்சத்தில் இடைப்பகுதி அசைவற்று அமைதியாக இருக்கிறது.

-மின்

என் நெஞ்சமே, அமைதியாக அமர்ந்திரு, உன் தூசியைக் கிளப்பாதே.

உன்னை அடைவதற்கான வழியை உலகம் தானே தெரிந்து கொள்ளட்டும்.

-ப.ப