பக்கம்:நூறாசிரியம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

நூறாசிரியம்

கொடுப்பினும் அது நிறைவாக இராது. அவ்வுணர்வின் பெருமை அக்கொடையினும் உயர்ந்தது என்றபடி

ஒன்றும் ஈயான் ஆகினும் ஒழிக - அவர்களின் ஈக உணர்வுக்குப் பரிசாக வானையும் நிலத்தையும் போல் ஒன்றினையும் அவர்களுக்குத் தரான் ஆயினும் போகட்டும்.

கொன்றும்... கொண்டு - ஏற்கனவே நடந்த முன்னைய நாள் போராட்டங்களில் மாணவ இளைஞர்கள் பலரைச் சுட்டுக் கொன்றும் அவனின் சாக்காட்டுப் பசி அடங்காது, மீண்டும் அந்த வெறிகொண்டு.

படையற நின்ற நடையினோரை - எவ்வகையான கருவிப் படைகளையும் கொண்டிலராய், வெறுவராய்க் கொள்கை முழக்கத்தோடு மட்டும் ஊர்வலம் செல்லும் இவரை.

விளையா நின்ற இளையோர் தம்மை - தமக்காகவும் நாட்டுக்காகவும் இன்னும் பல நிலைகளிலும் விளைந்து வரவேண்டிய தன்மையுடைய இவ்விளைய மாணவரை.

மலர் முகை - போல - மலரவேண்டிய மொட்டுக்களைக் கசக்கியும் கிள்ளியும் சிதைவு செய்து நெருப்பிலிட்டுப் பொசுக்குதல் போல.

உலர்தி நெஞ்சினன் - உயிர்களை வற்றடிக்கும் தீப்போலும் கொடிய நெஞ்சையுடையவன்.

உயிர் வாங்கினனே - அவர்களின் உயிர்கள் மேலும் நீங்கும்படி காவலர்களை விட்டுக் கொன்று தீர்த்தான்.

ஆடல் இளமகள் - நாணும் - நீராடல் செய்த இளமகள் ஒருத்தி அரசன் தோட்டத்து விளைந்த மாங்காயொன்று ஆற்றில் விழுந்து மிதந்து வர, அதனை அறியாமல் எடுத்து உண்டதால் அவளைக் கொன்ற கொடிய நன்னன் என்னும் அரசனும், இந்தி மொழி படிக்க மறுத்துப் போராடிய மாணவர்களைச் சுடுவித்துக் கொன்ற இவனின் வினைக்கு நானுவன் என்று பழியும் இழிவும் சாற்றியது.

நன்னன் நிகழ்ச்சியைக் குறுந்தொகை 292 ஆம் பாட்டால் தெரிந்து கொள்க.

மொழிக்கென-இலரே! - தாய் மொழியைக் காப்பதற்கென்று எழுச்சி கொண்டவர் இம்மாணவரைவிட வேறு எவரும் இலர்.

பழிக்கென-இவனே - அதே போல் பழி மேற்கொள்ள எழுந்தவன் இவனினும் வேறு எவனும் இலன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/264&oldid=1221103" இலிருந்து மீள்விக்கப்பட்டது