பக்கம்:நூறாசிரியம்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

427

ஒளியுமிழ் பிறைநுதல் ஊர்ந்தெழி லசைக்கு
நெளிகுழ லடர்த்த நிழலினி தென்னா
அகங்களி முகிழ்த்த கவின்குழிக் கன்னம் 5
வகுமாங் கதுப்பெயின் வாய்ந்தென உரையா
மதர்த்துப் பொங்குபு மாமைக் கோட்டகம்
விதிர்ப்புறத் தாங்கிடை வியத்தெனா நின்று
ஊன்கசிந் துயிர்நலம் உறிஞ்சக் குழைதருந்
தேன்கசி ஈரிதழ் தினல்வாழ் வென்று 10
செஞ்சீ ரடிதரச் சிலம்பு முனகலுந்
துஞ்சு வளக்கை துளும்பு கொஞ்சலும்
அழகீ தென்னோன் பழகிய ஞான்றை
எக்குடி மகளிர் என்றறிந் தக்குடி
ஒக்குமோ மேட்டிமை மகனையா னுார்கொள 15
மணந்தில னாயிற் றணந்திழி வாய்ப்பட
ஒவ்விலை நெஞ்ச மென்றோன் உகுவிழி
செவ்விதின் ஆளன் எனயான் றேர்கிலன்
பெட்பெதிர் வந்தெனின் கட்புலன் மீளான்
ஒட்புளங் கேட்டினோ சான்றவ ருரைக்குக் 20
கொள்பொரு ளாகுவை குவையோ டுனைக்கொள
நினைத்தெனின் இழிமடி ஆணெனு நெறியோர்
தாமே மெய்நலிந் தீட்டுதல் தவிர்த்தே
ஏமம் மனைவழி யாம்பெறு மென்னார் .
ஏயிவை மேவா தீண்டிவன் வந்தென் 25
ஆயுநர் இல்லா அறந்தவிர் மாக்கள்
வித்திய வேற்றுமை வீழ்ந்திழிந் திரியுங்
கல்லாப் பெண்ணேய்ங் கண்ணிலாப் பேதையின்
அல்லற் படுத்து மல்லற் கியாமே
பிறந்தே மல்லேம் பீடிலான் றன்னை 30
மறந்தும் நினைகொளா வினியே மாணொடு
காதல் கசியுங் கற்புளத் தடக்கித்
தீதறு நாணத் திரைநனி போர்த்து
வருந்துயர் வாளர்க்கு வாள்விழி காட்டிப்
பொருந்து லாளர் பொன்றுநாட் பொருந்தித் 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/453&oldid=1224414" இலிருந்து மீள்விக்கப்பட்டது