பக்கம்:நூறாசிரியம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

209

நூறாசிரியம்

மன்று - அரகம்- ஆளுமை முறை சார்ந்த அரச மன்றமும், நெறி முறை மாறி வேறுற்றுப் போனது.

ஆன்றோர் நெஞ்சம் அழல - அறிவும் ஒழுக்கமும் சான்ற உயர் நெறியாளர் தம் நெஞ்சு, புறச்சூழ்நிலை கண்டு கொதிப்புறும்படி

திரிதரும் இறந்த ஒழுக்கினார் - மாக்கள் போல் தாறு மாறாகக் குறிக்கோளற்று ஊர்க்கண், குறுக்கும் நெடுக்குமாகத் திரிகின்ற, தவிர்ந்த ஒழுக்கமுடைய அரம்ப மாக்கள்.

எள்ளுரை நிறைந்த - எள்ளத் தகுந்த இழிவுரைகளே எங்கும் கேட்கும்படி மலிந்து நிற்கின்ற.

ஊர்யான் நெருங்கிய ஊரே! - ஊராக இருக்கிறது, யான் வந்து நெரிசலில் நசுங்கி வதியும் ஊர்.

மாந்தனுக்கு புறக்கூறாக அமைந்த செல்வநிலை வாழ்க்கை எத்துணைச் சிறப்பாக அமையினும், அகக்கூறாக உள்ள இல்லற அமைவும், அதையொட்டிய நாள் நடைமுறைகளும் சிறப்புற அமைய வில்லையாயின் அவன் மகிழ்ச்சியுற்றிருக்க இயலாதெனும் உளவியல் உண்மையை உணர்த்தியதாகும் இப்பாடல். .

அகச் சிறப்பமை வின்மையால் மகிழ்ச்சி இயலாதாகவே எத்துணைச் சிறந்த உணவுண்டு இளமை பேணினும், உடல் காலக் கழிவின்றியே முதுமை தோற்றுவிக்கும் என்னும் உடலியல் உண்மையுங் கூறியது இது.

இது பொதுவியல் என் தினையும் பொருண்மொழிக் காஞ்சி என்னுந் துறையுமாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/235&oldid=1209071" இலிருந்து மீள்விக்கப்பட்டது