பக்கம்:நூறாசிரியம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

395


தற்குழ்பு அறிந்து தாம் உயர்வு உறுதலும் - சூழ்நிலையின் திறமும் வாய்ப்புகளும் அறிந்து அதைப் பயன்படுத்திக் கொண்டு தம்மளவில் தாம் மட்டும் முன்னேறுதலும்.

பொற்புஉறு கொள்கைப் பூண்துளி தளர்தலும் - சிறந்த கொள்கைப் பற்றினின்றும் சிறிதேனும் தளர்ச்சியுறுதலும்

பொற்பு சிறப்பு. பூண் பற்று. துளி- சிறிதளவு.

யாண்டுங் காண்கிலம் - எங்கும் யாம் காணேம்.

காண்கு இல்அம் காண்கிலேம்; காணேம்.

நுமக்கு விழைவு எழுதல் வேண்டும் கொல் - நுங்கட் கெனத் தனியே விருப்பம் வேண்டுங்கொல்!

மேல் பூட்கையோனே என விளித்தவர் ஈண்டு நுங்கட்கு என்றது அவன் போல்வாரையும் உள்ளடக்கி என்க.

மதி-அசை,

இப்பாடல் பாடாண்டிணை யென்னும் புறத்திணையும் நெடுமொழி வஞ்சி என்னுந் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/421&oldid=1211274" இலிருந்து மீள்விக்கப்பட்டது