பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

〔〕岛 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

இத்திணைக்கும் பலபொருள் ஒருங்கு வந்து ஒரு துறைப்படு அலுங்கொள்க. அவை :-கொற்றவை நிலையும், குடைநாட் கோளும், வாணாட்கோளும், படையெழுச்சி கண்டோர் கூறுவன வும், பகைப்புலத்தார் இகழ்வும், இவைபோல்வன பிறவும் இயங்கு படையரவமாய் அடங்கும். "

நிரைகோடற்கு ஏவிய அரசருள் நிரைகொண்டோர்க்கும் நிரைகொள்ளப்பட்டோர்க்கும் விரைந்து ஏகவேண்டுதலிற் குடை நாட்கோளும் வாணாட்கோளும் இன்றியமையாதன அன்மையின் ஈண்டுக் கூறாராயினார். அவை உழிஞைக்குக் கூறுப அதற்கு இன்றியமையாமையின.

இனித் அனைவந்த வேந்தருந் தாமும் பொலிவெய்திய பாசறைநிலை கூறலும், அவர் வேற்றுப்புலத்திருத்தலின் ஆண்டு "வோர் பூசலிழைத்து இரிந்தோடப் புக்கிருந்த நல்லிசை வஞ்சி" முதலியனவும் வயங்கலெய்திய பெருமைப்பாற்படும்.'"

துணைவேண்டாச் செருவென்றி நாடகவழக்கு," துணை வேண்டுதல் உலகியல் வழக்கு. நீயே புறவினல்ல லன்றியும் பிறவும் (சசு) என்னும் புறப்பாட்டும் வள்ளியோர்ப் படர்ந்து' சின்) என்னும் புறப்பாட்டும் முதலியன துணைவஞ்சி' என்

18. உழிஞைத்திணைக்குரிய துறைகளை எண்ணுமிடத்துக் 'கு டையும் "கும் நாள்கோள் அன்றியும் என ஆசியர் உம்மை கொடுத்து முன் வைத்துக் இதில், இவையிரண்டும் முன்னுள்ள வஞ்சித் திணைக்கும் உரியன என்ப்து குறிப்பினாற் புலப்படவைத்தார். எனவே குடைநாட்கோள் வாணாட்கோள் 'அ' இத்துறைகள் விழிஞைத்திணைக்கேயன் அத்தினையின் வஞ்சித் திணைக்கும் உரியனவாதல் தொல்க்ாப்பியனார்க்கு உடன்பாடாதல் பெறப்படும். கு?:தாட்கோள் வாள் நாட்க்ோள் என்னும் இவ்விரு துறைகளையும் முன்னுள்ள வஞ்சித்திணைக்குரியனவாக இளங்கே வடிகள் குறித்துள்ளமையும் இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும்.

19. புறப்பொருள் வெண்பாமாலையில் வஞ்சித்தினை க்குரிய துறைகளாகச் சொல்லப்பட்ட பாசறை நிலை, நல்லிசை வஞ்சி முதலியனவும் தொல்காப்பியனார் கூறிய வயங்கலெய்திய பெருமை: என்னுந் துறையின் பால் அடங்கும் என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.

20. இரு திறத்தார்க்கும் இடையே நிகழும்போரில் ஒவ்வொருவரும் தத்தமக் குத்துணையாக மற்றவர்கள்ையும் விரும்பியழைத்துக் கொள்ளுதலே உலகியலில் உண்மையாத நிகழக்கூடியது. இவ்விறன்றி ஒருவன் பிறர் துணை வேண்டாது இனித்து நின்று போரில் எல்லாரையும் வெற்றி கொண்டான் என்பது, உள் ளதும் இல்லதும் விரவிக் கூறும் நாடகவழக்கின்பற் பட்டதாகும் என்பது இத்தொடரின் :ொருளாகும்.

f பாசறைநிலை:-"மதிக்கு டைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லா மறந்து றப்பவும்-பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை யிருந்தன்று என்பது புற-வெமாலை- வஞ்சி-உக.

2 (பாடம்) பூசலிசைந்து:

3 நல்லிசை வஞ்சி- ஒன்னா தார் முனைகெடவிறுத்த வென் வேலா பவன் தன் மிகுத்தன்று என்பது புற-வெ-மாலை-வஞ்சி. உச்.