பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு அ தொல்காப்பியம்-பொருளதிகாரம் -உரைவளம்

ஒடா உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்-பிறக்கடியிடா உடன்ற வேந்தனை உன்னமரத்துடன் அடுக்கிக் கூறப்பட்ட உன்ன நிலையும்;

என்றது, வேந்தன் கருத்தானன்றி அவன் மறவன் வேந்தற்கு நீ வெற்றிகொடுத்தால் யான் நினக்கு இன்னது செய்வலெனப் பரவுதலும், எம்வேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக்கோடு பொதுளுக எனவும் பகைவேந்தற்குக் கேடு உளதெனில் அக்கோடு படுவதாக எனவும் நிமித்தங்கோடலும் என விருவகைத் தெய்வத் தன்மை; அஃதுடைமையான் அடுக்கிய உன்ன நிலையுமென்றார்.

இரண்டு நிலையாற் பொதுவுமாயிற்று. மன்னவன் வெற்றியே கருதாது இங்ஙனம் இருநிலைமையுங் கருதவின் வழுவுமாயிற்று.

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் என்றது: மாயோன் விழுப்புகழ்-மாயனுடைய காத்தற் புகழையும்; மெய் பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ் ஏனோர்க்கு உரியவாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத படைத்தல் அழித்த லென்னும் புகழ்களையும்; மன்பூவை நிலையும்- மன்னர் தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவை நிலையும்:

என்றது ஒன்றனை ஒன்றுபோற்கூறுந் துறை மன் எனப் பொதுப்படக் கூறியவதனான் நெடுநிலமன்னர்க்குங் குறுநில மன்னர் முதலியோர்க்குங் கொள்க. பெருஞ்சிறப்பு என்றதனால் படைத்தலுங் காத்தலும் அழித்தலுமின்றி அவரவர் தாமாகக் கூறலும், முருகன் இந்திரன் முதலியோராகக் கூறலுங் கொள்க.

உதாரணம் :

'த த்று வல னுயசி வெரிமரு எசவிச்சடை மாற் தருங் கணிச்சி மணி விடத் றோ லுங் கடல் வர்ை புரிவளை புதைய மேனி யடல் விெ ந் த சூசிந் பனைக்கொடி யோனு, மண் ஆறு திருமணி புசையு மேனி வின் னுயர் புட்கொடி வி ல்வெய் யோனு மணிம வி லுயகிய மாற வென்றிப் பிணிமுக ஆர்தி யொன் சேய் யோனுமென ஞா லங், காக்குங் கால முன் பி த் தோலா நல்லிகை நகல்வ ருள்ளுங்