リf&P
தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்
“ஆற்றவுங் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை அந்நாடு வேற்று நா டாகா தமவேயாம் ஆதலால்' ஆற்றுணர வேண்டுவ தில்.’ (பழமொழி-ககசு) இது கற்றோர்க்கு உளதாகும் விழுப்பம் கூறிற்று. இஃது ஏனைய மூன்று வருணத்தார்க்கும் ஒக்கும்.
ஒதுவித்தலாவது கற்பித்தல்.
ஒதுவித்தல் வருமாறு
'எண்பொருள ஆகச் செலச்சொல்லித் தான்பிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவு." (குறள்-க உச)
வேட்டலாவது - வேள்வி செய்தல்.
வேட்டல் வருமாறு 'நன்றாய்ந்த நீள் நிமிர்சடை முதுமுதல்வன் வாய்போ காது ஒன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த இருமுதுநூல் இகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய் அன்ன பொய்யுணர்ந்து பொய்ஒாாது மெய்கொளி.இ மூவேழ் துறையும் முட்டின்று போகிய உரைசால் சிறப்பின் உரவோர் மருக வினைக்குவேண்டி நீபூண்ட புலப்புல்வாய்க் கலைப்பச்சை கவற்பூண்ஞாண் மிசைப்பொலிய மறங்கடிந்த அருங்கற்பின் அறம்புகழ்ந்த வலை சூடிச் சிறுநுதற்பேர் அகலல்குற் சில சொல்லிற் பல கூந்தல் நின் நிலைக்கொத்த நின் துணைத் துணைவியர் தனக்கமைந்த தொழில் கேட்பக் காடென்றா நாடென்றாங்கு ஈரேழின் இடமுட்டாது நீர்தான நெய் வழங்கியும் எண் நாணப் பலவேட்டும்
Í
ஆயினால்,