பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கங் ہصلى الله عليه وسلم کی تعمل %5ع

13, கணையும் வேலும் துணையுற மொய்த்தலிற்

சென்ற உயிரின் நின்ற யாக்கை இருநிலத் தீண்டா அருநிலை வகையொடு இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே.

இளம் : இது, தும்பைத்திணையின் சிறப்பியல் உணர்த்துதல் நுதலிற்று.

இது மேலனபோல ஒருபாற்கு மிகுதலின்றி இருவகையார்க்கும் ஒத்த இயல்பிற்றாம்; ஒருவர்மாட்டும் மிகுதல் இல்ல்ை.

(இ-ள்.) கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் சென்ற உயிரின் நின்ற யாக்கை கணையும் வேலும் படைத் துணையாகக்கொண்டு பொருதல் காரணமாகச் சென்ற உயிரின் நின்ற யாக்கை, இருநிலம் தீண்டா அருநிலை வகையொடு- நீர் அட்டை கால வயப்பட்டு உடலினின்று உயிர் பிரிக்கப்படுமாறு, இருபால் பட்ட ஒரு சிறப்பின்று - இருபாற் படுக்கப்படும் அற்ற துண்டம் இணைந்ததுபோன்று ஆடலொத்த பண்பினையுடையது.

(இருநிலம் தீண்டா அரு - நீருட் கிடக்கும் அட்டை (கங்) நச் : இது தும்பைக்காவதோர் இலக்கணங் கூறுதலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது."

(இ-ள்.) கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்பலரும் ஒருவனை அணுகிப் பொருதற்கஞ்சி அகல நின்று அம்பா னெய்தும் வேல்கொண் டெறிந்தும் போர் செய்ய, அவ்வம்பும் வேலும் ஒன்றோடொன்று துணையாகத் தீண்டுமாறு செறி தலின் சென்ற உயிரின் நின்ற யாக்கை-சிறிதொழியத் தேய்ந்த உயிரானே துளங்காது நிலைநின்ற உடம்பு; இருதிலந் தீண்டா யாக்கை அருநிலை வகையோடு -வாளுந் திகிரியு முதலியவற்றால் ஏறுண்ட தலையேயாயினும் உடலேயாயினும் பெரிய நிலத்தைத் தீண்டாதெழுந்து ஆடும் உடம்பினது பெறற்கரும் நிலையுடைத்

1. சிறப்பின்று-சிறப்பினையுடையது; சிறப்பு இன்று எனப் பிரியும். இன், சாரியை, று-அஃறிணையொன்றன் பால் விகுதி. சிறப்பின்று என்னும் பயணி லைக்கு எழுவாயாக மேலைச் சூத்திரத்திலுள்ள தும்பை என்பது அதிகாரத்தான் வந்தியைந்தது.

2. இந்நூற்பா தும் ைத்திணையின் சிறப்புணர்த்திய து எனவும் அடுத்து வரும் நூற்பா, ைமந்துபொருளாகப் பொரும் தும்பைத் திணையின் பொதுவிலக் கணம் பற்றிய துறைகளை விரி த்துரைப்பதெனவும் கொள்வர் நச்சினார்க் கினியர்.

(பாடம்) 3 செறுதலின்.