பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


அந்தப் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான்கு முயல்களோடும் அவர்கள் விளையாடினார்கள்.

அன்று மாலையே முயல்கள் காட்டுக்குத் திரும்பின.

“சமர்த்து முயல்கள்! அடுத்த ஞாயிற்றுக் கிழமை கட்டாயம் வந்துவிடுங்கள்” என்று அந்தச் சிறுமி டாட்டா கூறினாள்.

அதன்படியே நான்கு முயல்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பட்டணத்து வீட்டுக்குச் சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டன.