இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அவ்வளவு பலமான கட்டுக்களைக் குதறி எறிவது யானையால் முடியாது. ஏதோ தெய்வம் தான் வந்து இதைச் செய்திருக்க வேண்டும். அந்தத் தெய்வம் வனதேவதையாகக் கூட இருக்கலாம்.
வனதேவதைக்கு அன்பான யானையைத் தாங்கள் பிடித்தது அந்தத் தெய்வத்துக்குப் பிடிக்க வில்லை போலிருக்கிறது.
இந்தக் காட்டில் மேற்கொண்டு தங்கினால், தங்களுக்கு, வனதேவதையால் ஏதாவது கேடு வரும் என்று அஞ்சி உடனே புறப்பட்டுச் சென்று விட் டார்கள்.
குட்டி முயலுக்கு அப்போதுதான் மன அமைதி ஏற்பட்டது.