பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VII. சென்னை நகரம்

தென் பெண்ணைக்கும் வட பெண்ணைக்கும் இடைப்

பட்ட இடம் தொண்டை மண்டலம் என்பதை மெய்ப் பித்த பிறகு, அம்மண்டலத்தின் இடையில் அமைந்துள்ள சென்னை நகரம் தொண்டை நாட்டினது - தமிழகத்தைச் சேர்ந்தது என்று கூறவும் வேண்டுமோ ? சென்னே தொண்டை நாட்டது. ஆயின், எந்தக் கோட்டத்தைச் சேர்ந்தது? இது நல்ல கேள்வியே. கி. பி. 1647-ல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில், ‘தொண்டை மண்டலத் துப் புழல் கோட்டத்து - ஞாயிறு நாட்டு-சென்னபட்டினம்’ என்பது காணப்படுகிறது.” -

இதனுல் சென்ன பட்டினம் என்பது வெள்ளேயர் வந்து சென்னையில் தங்குவதற்கு முன்னரே இருந்த காம் என்பது தெரிகிறது.

சென்னபட்டினம் என்பது இப்பொழுது உயா திே மன்றம் உள்ள இடத்தில் இருந்த நகரமாகும். அங்குச் சென்ன கேசவப் பெருமாள் கோவில் இருந்தது. வெள்ளே யர் வேரூன்றத் தொடங்கியதும் அக்கோவில் இடிக்கப் பட்டது , இன்றுள்ள தங்கசாலைத் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டது. ‘சென்ன கேசவப் பட்டினம் என்பது ‘சென்ன பட்டினம் என மருவி வழங்கலாயிற்று.?

மயிலாப்பூர் -

இன்று சென்னேயின் ஒரு பகுதியாகவுள்ள மயிலாப் பூர் தாலமி காலத்தில் (கி. பி. முதல் இரண்டு நூற்றண்டு

AAA AAAA AAAA AAAA AAAA AAAA SAS A SAS A SAS SSAS SSAS SSAS SS SAAAAAA AAAAS AAAAA AAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAS A SAS SSAS

pp. 361-862. -

2. 1bid. P. 112, சன்னப்பன் பெயரால் சன்னப் பட்டி -னம்’ என்றாயிற்று என்பாரும் உளர். Ibid, P. 42,