பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 மென்று நிரூபிப்பதற்குக் குழந்தைகளுக்குப் பொய்யும் புலையும் நிறைந்த கலைகள் போதிக்கப்படுகின்றன. சட்டத் திற்குப் பணியவேண்டுமென்பது ஒரு மதத்தைப்போல் கருதப்படுகின்றது. நல்லொழுக்கமும் அதிகாரிகளுடைய சட்டங்களும் வித்தியாசமற்றவை என்று ஒன்றுசேர்க்கப்பட்டடு, எல்லாம் தெய்வத்தன்மை வாய்ந்தவை என்று கருதப் படுகின்றன. எவனொருவன் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து அதை நிலைநாட்டப் பகைவர்களுடன் போராடுகிருனே அவனே பெரிய வீரனென்று இளைஞர்களுக்குப் போதிக் கப்படுகின்றது. - நாம் குழந்தைப் பருவத்தைக் தாண்டிப் பொது வாழ்க் கையில் ஈடுபடும் பொழுது, சமூகமும் இலக்கியங்களும், தண்ணீர் சொட்டுச் சொட்டாய் விழுந்து கல்லைக் குழித்து விடுவதுபோல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், மேற்சொன்ன கொள்கைகளையே நமக்குப்புகட்டுகின்றன. சரித்திரப் புத்தகங்களும், அரசியல் நூல்களும், பொருளாதார நூல்களும் சட்டத்துக்குப் பணிய வேண்டுமென்ப தையே சதாகாலமும் போதிக்கின்றன. இயற்கைப் பொருள் நூல்களில் ஆராய்ச்சியால் கண்டுபிடிக்கும். விஷயங்களைக் குறிப்பிட வேண்டியதிருக்க, அவற்றில் மத நூல்களிலிருந்தும் சட்டப் புத்தகங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட சொற்றெடர்கள் ஏராளமாய்ப் புகுத்தப் படுகின்றன. இவ்வாறு எப்பெழுதும் நாம் சட்டத்திற்கு மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக நம்முடைய அறிவு புகைக்கப்படுகிறது.பத்திரிகைகளும்,இதே வேலையைத்தான் செய்து வருகின்றன. சட்டத்தை மதிக்க வேண்டுமென்று. பிரசாரம்செய்யாத கட்டுரையே அவற்றில் மேன்மையாது. அதே பத்திரிகைகளில் சட்டத்தின் பயனற்ற