பக்கம்:தம்ம பதம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் பதினாறு

இன்பம்

207. தியானத்தில் நிலைபெற்று நிற்காமல், உலகபாசங்களில் ஆழ்ந்து, தன் நன்மையையும் கைவிட்டு, இன்பத் தோட்டத்திலே இருப்பவன் , தியானத்தில் ஆழ்ந்து முயற்சியோடு இருக்கும் யோகியைக் கண்டு பொறாமைப் படுவான். (1)

208. இன்பமயமானதையோ துன்பமானதையோ எவனும் பற்றிக் கொண்டிருக்க வேண்டாம். இன்பமானதைக் காணாமையும் துக்கம், துன்பமானதைக் காண்பதும் துக்கமே. (2)

209. ஆதலால், எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப் பட்ட பொருளை இழத்தல் துன்பம். ஆசையும், வெறுப்பும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை. (3)

210. ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது;

ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது;
ஆசையற்றவனுக்குச் சோகமில்லை :
பயம்தான் ஏது?

(4)

211. பிரேமையிலிருந்து சோகம் தோன்றுகிறது;

பிரேமையிலிருந்து அச்சம் தோன்றுகிறது;
பிரேமையற்றவனுக்குச் சோகமில்லை;
பயம்தான் ஏது?

(5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/54&oldid=1381852" இலிருந்து மீள்விக்கப்பட்டது