பக்கம்:தம்ம பதம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புத்தர் ☐ 49

189. துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கமாகிய அஷ்டாங்க மார்க்கம்.[1] (13)

190.இதுவே பாதுகாப்பான புகலிடம்; இதுவே தலை சிறந்த சரணம். இந்த அடைக்கலத்தை அடைந்த பிறகு, மனிதன் எல்லா வேதனைகளிலிருந்தும் விடுபடுகிறான். (14)

191. மக்களிலே திலகமான உத்தம புருடர் [புத்தர்] தோன்றுதல் துர்லபம். அவர் கண்ட இடங்களில் பிறப்பவர் அல்லர். அத்தகைய பரம ஞானி எங்கே பிறந்தாலும் அந்தக் குலம் விளக்கமடைகிறது. (15)

192.புத்தர்களின் தோற்றம் நன்மையளிக்கும்; அவர்களின் தரும உபதேசம் நன்மையளிக்கும்; பெளத்த சங்கத்தில் சேர்தல் நன்மையளிக்கும்; சங்கத்தில் சேர்ந்தவர்களின் தவமும் நன்மையளிக்கும். (16)

193. தீமைகளையெல்லாம் வென்று, துக்க வெள்ளத்தைத் தாண்டிக் கரையேறிய வணங்கத்தக்க புத்தரையோ, அவர் அடியார்களையோ வணங்குவோன். (17)

194. நிருவாண நிலைபெற்று, எதற்கும் அஞ்சாது (காற்றைப்போல்) சஞ்சரிக்கும் முத்தர்களை வணங்குவோன்-அடையும் புண்ணியத்தை எவரும் அளவிட முடியாது. (18)


  1. இதன் விளக்கத்தை அனுபந்தம் ஒன்றில் காண்க

த- 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/51&oldid=1360036" இலிருந்து மீள்விக்கப்பட்டது