பக்கம்:தம்ம பதம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 ☐ தம்ம பதம்

339. உயிர்களுக்கு இன்பங்களும் பலவித ஆசைத் தொடர்புகளும் ஏற்படுகின்றன. அவை இந்த இன்பங்களில் பற்றுக் கொண்டு இவற்றிலேயே தோட்டமாயிருக்கின்றன. இத்தகைய மனிதர்களே (மீண்டும் மீண்டும்) பிறப்பையும் மூப்பையும் அடைகிறார்கள்.

340. அவாவினால் உந்தப்பட்ட மனிதர்கள் வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப்போல், ஒடித் திரிகிறார்கள். அவாவின் விலங்குகளில் கட்டுண்டு அவர்கள் நெடுங்காலம் துயரத்தை அநுபவிக்கிறார்கள்; இப்படித் திரும்பத் திரும்ப நேருகின்றது. (9)

341. அவாவினால் உந்தப்பட்ட மனிதர்கள், வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப்போல், ஒடித் திரிகிறார்கள். ஆதலால் மோக பந்தங்களிலிருந்து விடுதலை பெற விரும்பும் பிக்கு அவாவை ஒழிப்பானாக. (10)

342.(அவாவாகிய) வனத்திலிருந்து,[1] மீட்சி பெற்று வன மற்ற நிருவாணப் பிரதேசத்தை அடைந்தவன் (அவாவாகிய) வனத்திலிருந்து தப்பியபின் அதே வனத்திற்குத்திரும்பி ஒடுகிறான்-விடுதலை பெற்றுத் திரும்பவும் பந்தனத்துள் மாட்டிக் கொள்ளும் இந்த முத்தனைப் பாருங்கள் (11)

343. இரும்பு விலங்கையும், மரக்குட்டையும், கயிற்றுக் கட்டையும் அறிஞர் பலமான தளை என்று கூறுவதில்லை; ஆனால், பொன்னாலும், இரத்தினங்களாலும் செய்யப் பெற்ற நகைகளிலும் மனைவியிடத்தும் மக்களிடத்தும் வைக்கும் பாசமே மிகவும் பலமுள்ளது என்பர். (12)


  1. வளம்-காடு என்றும் அவா என்றும் இரு பொருளுடையது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/82&oldid=1359875" இலிருந்து மீள்விக்கப்பட்டது