பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடவன் பெண்களிடம் கொள்ளும் காம ஆசை எதுவரை அழிக்கப்படாமல் அணுவளவேனும் இருக்கிறதோ அதுவரை பால்குடி மறவாத பசுங்கன்றுதன்தாயிடம் ஒட்டிக்கொள்வதுபோல், அவன் மனம் (வாழ்வைப்) பற்றிக் கொண்டேயிருக்கும். '

அவாவினால் உந்தப்பட்ட மனிதர்கள், வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப்போல், ஒடித்திரிகிறார்கள். அவாவின் விலங்குகளில் கட்டுண்டு அவர்கள் நெடுங்காலம் துயரத்தை அநுபவிக்கிறார்கள்; இப்படித் திரும்பத் திரும்ப நேரிடுகின்றது. '

இரும்பு விலங்கையும், மரக்குட்டையையும், கயிற்றுக் கட்டையையும் அறிஞர் பலமான தளை என்று கூறுவதில்லை. ஆனால் பொன்னாலும் இரத்தினங்களாலும் செய்யப் பெற்ற நகைகளிலும், மனைவியிடத்தும், மக்களிடத்தும் வைக்கும் பாசமே மிகவும் பலமுள்ளது என்பர். '

ஓ பிக்குகளே அறநெறிக்கு எதிரான ஐந்து வகையான தடைகளையும்" அறவே நீக்காமலும்,அறிவுக்கு விலங்குகளாயுள்ள ஐந்துதளைகளையும்" முற்றிலும் உடைத்தெறியாமலும் உள்ள ஒரு பிக்கு, இந்தத் தருமத்திலும் விநயத்திலும் முழுப்பலனை அடைய முடியாது, பூரண வளர்ச்சியோ முதிர்ச்சியோ பெற முடியாது எவ்வகையிலும் அது இயலாத காரியம்' ੋਂ பிக்குகளே! அறிந்தவன் ஒருவனுக்கு, பார்க்கும் வல்லமையுள்ள வனுக்கு ஆஸ்வங்களை அழித்து விட்இயலும் அறியாதவனுக்கும், பார்க்க வல்லமையற்றவனுக்கும் அது இயலாது. அறிந்தவனுக்கும், பார்வையுள்ளவனுக்கும் ஆஸவர்களை அழிக்க முடியும் என்று சொல்கிறேன். ஏன்? அறிவோடு ஆராய்ந்து பார்ப்பதையும் அறிவில்லாமல் பார்ப்பதையும் அது பொறுத்திருக்கின்றது."

பிக்குகளே! அறிவில்லாமல் பார்ப்பவனுக்கு, அதுவரை தோன்றியிராத ஆஸ்வங்கள் முளைக்கின்றன. முன் தோன்றியுள்ள

ஐந்து தடைகள்-அவா, வெறுப்பு. மடிமை, கர்வம், மயக்கம். 'ஐந்து தளைகள் உடம்பு உண்மையென்னும் எண்ணம். சந்தேகம், பயன் கருதிச் செய்யும் விரதங்கள். புலன் இன்பங்களில் விருப்பம்; கோபம். 50 | புத்தரின் போதனைகள்