பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்திக் கொள்ளவும் அது வழி செய்திருக்கின்றது. பல தொழில் ஸ்தாபனங்களில், அரசாங்கம் ஏராள மான பங்குகளை எடுத்துக்கொண்டு, தனியார்களுக் கும் பங்குகள் கொடுத்து, ஒவ்வொன்றிலும் 50 பங்கு தாரர்களுக்கு மேற் போகாத பிரைவேட் லிமிடெட் கம்பெனி'களாக அமைத்திருக்கின்றது. இத்தகைய கம்பெனிகளில் ஒன்றுதான் பங்களூரிலுள்ள ஹிந்துஸ் தான் மிஷின் டுல்ஸ் லிமிடெட்'. இதன் மூலதனத்தில் 85% அரசாங்கத்தினுடையது : எஞ்சிய பகுதி ஒரு ஸ்விட்ஜர்லாந்துக் கம்பெனியினுடையது. அந்த ஸ்விஸ் கம்பெனியே ஸ்தாபன நிர்வாகத்தை நடத்தி வருகின்றது. - முதலாவது திட்டத்தின் பயனக 1955-56 இல் உணவுத் தானியங்கள் 648 லட்சம் டன் உற்பத்தியாகி யிருந்தன. திட்டத்தின் குறிக்கோளைவிட இது 30 லட்சம் டன் கூடுதலான உற்பத்தி. பருத்தி, எண் ணெய் விதைகள், சணல் முதலியவையும் தக்க அளவு உற்பத்தியாகி யிருந்தன. இரண்டாவது திட்டம் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் 1960-61 இல் தயாராயிற்று. அதன்படி கீழ்க்கண்ட முறையில் ரூ. 4,800 கோடி செலவிட உத்தேசிக்கப்பட்டது : விவசாயத்திற்கும், கிராம சமுதாய நலனுக்கும் H. H. H. ரூ. 568-கோடி அணைகள் முதலிய பாசன வசதிக் கும், மின்சார உற்பத்திக்கும் ரூ. 913- , சுரங்கம், தொழில்கள் ரூ. 890- , போக்குவரத்து சாதனங்கள் ரூ. 1,385- , சமுதாய சேவைக்குரிய திட்டங்கள் ரூ. 945- , ப)ெ பெ)ெ அதி ரூ. 99- . ரூ. 4,800-கோடி மொத்தம்