பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காத்தான் சுமந்த பிணம்

61


அன்று முதல் அவன் திருந்திவிட்டான், புதிய மனிதனாக மாறிவிட்டான். கள், சீட்டு, சூது முதலியவற்றின் பக்கமே அவன் தலைவைத்துப் படுப்பதில்லை. இரவில் நேரம் கழித்து அவன் வெளியே செல்வதுமில்லை.

இரண்டு வாரங்களுக்குப் பின்பு, அவன் முன்பு காதலித்திருந்த மேரியைக் கடிமணம் புரிந்துகொண்டான். அவன் அடைந்த ஆனந்தத்தைப் போல் நாம் எல்லோரும் அடைவோமாக!