பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


அக்காலத்தில் தெருப்புறங்களில் ரகசியப் போலிஸாருடைய பிரேதங்கள் அடிக்கடி கிடப்பது வழக்கம். அவற்றின் கழுத்துக்களிலே சீட்டுக்கள் கட்டப்பட்டிருக்கும். அச்சீட்டுக்களிலே ஐரிஷ் தொண்டர் படையினரால் தண்டிக்கப்பட்டவர்கள். ஒற்றர்களே எச்சரிக்கை என்று எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஒற்றர்களா இல்லையா என்று சந்தேகப்படக்கூடிய நபர்களுக்கு மட்டும் உயிர்ப் பிச்சை கொடுத்தனுப்பி விடுவதே வழக்கம்.

கடைசியாகத் தொண்டார்கள் மீண்டும் ஷன்னான் நதியைத் தாண்டித் தென்திப்பெரரிக்குச் சென்றனர். அவர்களுக்குச் செலவுக்குப் பணம் இல்லாமல் கஷ்டமேற்பட்டது. பலர் பணம் கொடுக்கத் தயாராயிருப்பினும், அவர்களைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தொண்டர்கள் தங்களைப் போன்ற ஏழைகளுடைய வீடுகளிலேயே பெரும்பாலும் தங்கியிருந்தார்கள். பல்லாக் நகர வாசியான சம்ன் ஒ டிபிர் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். அந்த நண்பருடைய வீட்டில் தான் முன்பு நடனக் கச்சேரி நடந்து, பின்னர் ஸீன் ஹோகன் வெளியேறும் போது கைது செய்ப்பட்டான்.

வெகு காலமாக மறைந்து திரிந்து கொண்டு, தீவிரமான காரியங்களைச் செய்வதற்கு வழியில்லாமல் பொழுதுபோவதைக் கண்டு தான்பிரீன் மனம் வருந்தினான். அவன் ஸோலோஹெட்பக்கிலும், நாக்லாங்கிலும் ஆரம்பித்துக் கொடுத்த காரியங்களைத் தேசத்தார் பின்பற்றி ஆங்காங்கே பெரும் போர் தொடுப்பார்கள் என்று நம்பியிருந்தான். சிற்சில இடங்களில் மட்டும் போலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டும், உதிரியான போலிஸாரிடமிருந்து ரிவால்வர்களும் துப்பாக்கிகளும் பறிக்கப்பட்டும் வந்ததே தவிர எங்கும் ஒரேயடியான வேலை நடக்கவில்லை. ஆதலால் மேலும் தீவிரமான காரியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று தான்பிரினும் தோழர்களும் முடிவு செய்தனர். டப்ளினுக்குப் போனால்தான் தொண்டர்படையின் நிலையும், தேசமக்களின் அபிப்பிராயமும் நன்கு புலப்படும் என்று அவர்கள் கருதினார்கள். அதன்படி ராபின்ஸனையும் ஹோகனையும் வடதிப்பெரரியில் விட்டு விட்டு தான்பிரீனும் டிரீஸியும் இரண்டு சைக்கிள்களை எடுத்துக்கொண்டு டப்ளினுக்குச் சென்றனர்.

டப்ளினில் அவர்கள் ஷனாகனுடைய வீட்டில் தங்கியிருந்தார்கள். ஷனாகன் அவர்களுடைய பழம்பெரும் தோழன். எந்தத் தொண்டர் டப்ளினுக்குச் சென்றாலும் அவருடைய வீட்டுக்குத்தான் செல்வது வழக்கம். தொண்டர் படையின் சேனாதிபதிக்கு உதவியாகக் கடிதப் போக்குவரத்தைக் கவனித்து வந்தமைக்கேல் காலின்ஸைக் கண்டு தான்பிரீனும் டிரீஸியும் பல சமயம் விவாதம் செய்தார்கள். டப்ளினில் தங்குவதற்கு அவர்களுக்கு வேண்டிய உதவி செய்வதாய் காலின்ஸ் வாக்களித்தார். அவ்வுறுதியைப் பெற்றுக் கொண்டு அவர்கள் ராபின்லனையும், ஹோகனையும் அழைத்துக்கொண்டு வருவதற்காக மீண்டும் நாட்டுப்புறம்சென்றனர்.

81