பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் ஒரு பூக்காடு:pgf/23 மெய்ப்பு பார்க்கப்பட்டது

"பூக்களின் சிறப்பு"

தமிழ் நாட்டில் பூக்களுக்கிருந்தச் சிறப்பை ஆசிரியர் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது என்னிப்பார்த்து மகிழத்தக்கதாயுள்ளது. இத்த வகையில்,

1. தமிழர் நிலங்கட்கு அந்தந்த நிலங்களில் விளங்கியச் சிறப்பான பூவைக் கொண்டே பெயரிட்டுள்ளனர். (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்)

2.புறத்திணைத் துறைகள் பூக்களின் பெயர்களாலேயே அமைக்கப்பட்டுள்ளன. (வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி உழிஞை, நொச்சி, தும்பை, வாகை.)

3.அரசர்களின் சின்னங்களாய்ப் பூக்கள் சிறக்கின்றன. (சோழர் - ஆத்திப்பூ பாண்டியர்-வேப்பம் பூ; சேரர் - பனம் பூ)

4.ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பூவை விருப்பப் பூ ஆக்கினர். (சிவன் - கொன்றை; முருகன் - கடம்பு; திருமகள் -ஆம்பல், கலைமகள் - வெண்டாமரை, அருகன் - அசோகு: புத்தன் - தாமரை.) -

5.தமிழ் மன்னர்கள் அளித்த சிறந்த பரிசுப் பொருள்கள் பூக்கள் வடிவில் செய்யப்பட்டன (பொற்றாமரை)

6.உயர்ந்த பட்டங்கள் பூக்களின் பெயர்களால் கொடுக்கப்பட்டன. (எட்டி, காவிதிப் பட்டங்கள்.)

7.மக்கள் அணிவதிலிருந்து நாள் முழுவதும் செய்யும் செயல்களிலெல்லாம் பூக்கள் சிறப்பிடம் பெறுகின்றன.

"பருவம்,உறுப்பு,குணம்" _______________________

பூக்களின் வரலாற்றையும் சிறப்பையும் எடுத்துக் கூறிய ஆசிரியர் அடுத்து, அவற்றின் அமைப்பு, குணம் ஆகியவற்றைத் தொகுத்துரைத்துள்ளார்.

1.பூக்களின் பருவங்கள் ஏழு (நனை; அரும்பு, முகை; போது; மலர்; அலர்; வீ.)

2.உறுப்புகள் ஏழு (காம்பு; புல்லி; அல்லி; சூலகம்; ழகரம்; தாது; தேன்.)மெய்ப்பு பார்க்கப்பட்டது