பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிவாளர் (பொறுப்பில்) சிலம்பொலி சு. செல்லப்பன் எம். ஏ., பி. டி., பி. எல்., அவர்கள் வழங்கிய - நூற் கண்ணாடி - அணிந்துரை.

மலர்க்களஞ்சியம்

"கன்னல் பொருள்தரும் தமிழே நீ ஒர் பூக்காடு; நான் அங்கோர் தும்பி" எனப் பாவேந்தர் பாரதிதாசன் தமிழைப் பூக்காடாக்கித் தன்னைத் தும்பியாக்கிச் சுவைத்து மகிழ்கிறார். கவிதைத் தும்பியாம் கோவை. இளஞ்சேரன் அவர்கள், தமிழ் இலக்கியங்கள் காட்டும் பூக்களிலே படிந்து, தோய்ந்து, திரட்டியுள்ள தீந்தமிழ்த் தேனடையே 'இலக்கியம் ஒரு பூக்காடு ii