பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா. 59 " தாய்ப்பாலில்லே. குழந்தைக்கி வேறே குத்தம் இல்லே. உனக்கு ரெண்டு வேளை சோறு, ரெண்டு வேளை தீனி, மாசம் எட்டு ரூபாய் கொடுக்கறேன். இங்கே இருந்து இந்தக் குழந்தையை நீ காப்பாத்தணும். வீட்டுக்கு ஒரே பிள்ளை இது. இருந்திருந்து பெத்த மகன். நீ இருந்து காப்பாத்தனும் இன்னாங்க அந்தப் பெரியம்மா.

  • அம்மா! என் குளங்தை?-நானறியாமலே அந்தக் கேள்வி என் வாயிலேருந்து வந்திட்டது. -

" உன் குழந்தைக்கு மாவு கரைச்சுக்கொடு-மாவு நான் கொடுக்கறேன். இந்தக் குழந்தைக்கு வயிற்றிலே கட்டி விழறது. உன் குழந்தை இது மாதிரி மோசமாயிருக் காது. என்ன சொல்றே? சட்டு புட்டுனு உன் புருஷன் கிட்டே சொல்லிட்டு வந்துடு. காலையிலே ஒரு வேளை சாயந்தரம் ஒருவேளை ஒன் குழந்தையையும் பார்த்துட்டு வா-கான் ஒன்னும் அப்படியாப்பட்ட பாவி இல்லேஎன்ன சொல்றே? 'கான் என்ன சொல்றது? எத்தனையோ விசயம் கவனிக்க வேண்டியிருக்குது, கம்ப புளைக்க வந்துட்டோம். உனக்கு சரியா புளைப்புக் கிட்டற வரைக்கும் வவுத்தெ ரெண்டு பேரும் கட்டிப்போட்டுகிட்டிருக்க முடியுமா? என் வவுத்தே அவுங்க வீட்டிலே களுவிட்டாலும் என் சம்பளம் உனக்கு மிச்சம் தானே. நான் ஒப்புக் கிட்டேன்.' மெளனம் இருவரிடையிலும் தேங்கியது. சத்திரத்தில் மூட்டையும் முடிச்சுமாய் இறங்குபவரும் வெளியே போவாருமாய்ச் சண்டை போடுபவரும், கொட்ட மடிப்ப வருமாய் இரைச்சல் காதைப் பொளிந்தது. ஆயினும் இவ்விருவருக்கு மாத்திரம் அது தாரத்துச் சத்தமாய்த்தா னிருந்தது.