பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 புற்று இப்பொழுது திடீரென ஒரு பழைய சம்பவம் அவன் கண் முன் கின்றது, செத்துக்கொண்டிருக்கையில்கூட், அதை மறுபடியும் மனத்திரையில் பார்க்கையில் சிரிப்பு வந்தது. தன் வீட்டுக்கு நாலு வீடு தாண்டி ஒரு வீட்டில், அந்த வீட்டுப் பையனுடன் அவன் விளையாடிக் கொண்டிருந் தான். சவுக்காரக் கட்டியைத் தண்ணிரில் கரைத்து, துடைப்பக் குச்சியை அதில் தோய்த்து, மறு நுனியில் ஊதி, கொப்புளங்கள் உண்டாக்கிக் களித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி கிணற்றுக்குப் போய், இன்னும் கொஞ்சம் சோப்பைக் கரைத்துக் கொண்டு திண்ணைக்கு வருவான். அக்தாத்து மாமா திண்ணையில் இன்னும் நான்கு நண்பர் களுடன் சீட்டாடிக் கொண்டிருந்தார். திடீரென்று அந்தாத்து மாமி, வாயிலும் கன்னத் திலும் அடித்துக்கொண்டு உள்ளிருந்து ஓடி வந்தாள், "ஐயோ என் வைரத் தோட்டைக் காணுமே!’’-மாமி உளறி யடித்தாள். ஐயோ பாவி என்ன பண்ணே?' உடனே கூட்டம் கூடி விட்டது. “ஸ்னானம் பண்ணறத்துக்காகக் கழட்டிக் கிணத்தடி யிலே வச்சேன். தலையைத் துவட்டிண்டதும் மாட்டிக் கலாம்னு சமயலறைக்குப் போய்ப் புடவையை மாத்திண்டு வரத்துக்குள்ளேயே மாயமாய்ப் போயிடுத்தே, இதென்னடி யம்மா அக்கிரமம்' 'வாசக்கூட்டி எங்கே?' "அவ அப்பவே போயிட்டாளே!'-திடீரென்று அவள் பார்வை அவன்மேல் விழுந்தது. ஒரே பாய்ச்சலாய் அவன்மேல் பாய்ந்தாள். 'இந்தக் குருக்களாத்துப் பையன் தான் கிணத்தடிக்குச் சும்மா வந்திண்டிருந்தான்-' மாமா கண்களில் பொறி பறக்க அவன் பக்கம் திரும்பி னார். அட பயலே! நிஜத்தைச் சொல்லு!”