பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 のU7・9・gf... 109

   "சரி, மாப்பிள்ளைதான் இல்லை. ஜகதாவைக் கூட்டிக் கொண்டு போகிறேனே! நாங்களும் பிரிஞ்சு கொஞ்ச நாளாச்சு. உங்களிஷ்டப்படி கல்யாணமாகி நாலாம் நாள் கிருஹப் பிரவேசத்துக்கு விட்டதுதானே!" என்று சொல்லிப்பார்த்தாள்.
   ஆனால் அம்மா (உங்கள் அம்மா-இப்போ எனக்கு இரண்டு அம்மான்னா ஆயிட்டா!) ஓரக் கண்ணால் என்னைப் பார்த்துண்டே, "என் பிள்ளை எப்போ அங்கே வர முடியல்லியோ உங்கள் பெண் இங்கேயே நாலு பேரோடு ஸல்லோ புல்லோன்னு இருந்துட்டுப்போறாள்! இனிமேல் எங்கள் பெண்ணும் தானே! அப்புறம் உங்களிஷ்டம். அவளிஷ்டம். இங்கே ஒருத்தரும் கையைப் பிடிக்கிறதாயில்லே!" என்றார்.
   இதென்ன கன்றுக் குட்டிக்கு வாய்ப்பூட்டைப் போட்டுப் பாலூட்டற சமாசாரமா? என்னை அம்மா ஆழம் பார்க்கிறது தெரியாதா, என்ன? நான் ஒண்னும் அவ்வளவு அசடு இல்லை. இந்த வீட்டிலேயே யார் பளிச்சுனு பேசறா? இங்கேதான் பேசினதுக்குப் பேசின. அர்த்தம் கிடையாதே! எனக்குத்திடீர்னு சபலம் அடிச் சுண்டது, என் கையொட்டின தம்பி சீனுவைப் பார்க்கணும்னு. ஒரு நிமிஷம் என்னைப் பிரிஞ்சு இருந்ததில்லை. காலையில் கையலம்பி நனைஞ்ச சட்டையை மாத்தறதிலிருந்து, ராத்திரி தொட்டிலில் அவன் படுக்கையை விரிக்கிற வரைக்கும் அக்கா தான் எல்லாம் பண்ணியாகணும். இப்போ குழந்தை என்ன பண்றானோ? ஆனால் நான் இங்கேயே இருக்கேன்னு சொல்லிவிட்டேன். அம்மா கண் தளும்பிற்று. அம்மா பேசாமே போயிட்டாள். நான் கொஞ்ச நாழி திக்பிரமை பிடிச்சு நின்றேன். அம்மா குஞ்சிரிப்புடன் என்னை ஒரு நிமிஷம் ஆழ்ந்து நோக்கி விட்டுக் காரியத்தைப் பார்க்கப் போயிட்டார். அவருக்கு