பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல்ா ... ச. ரிா 4? ஹரிணி, கொண்டையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே மோருஞ் சாதம் கரைச்சு, பழையது மூலையில் வெச்சிருக்கேன். வீடு ஜாக்கிரதை' இப்போ வீட்டில் நான் மட்டும்தான். அரணை ஒன்று என் காலில் உராய்ந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறது. ஒன்று திடீரெனப் புலனாகிறது. மனிதனைத் தவிர மற்றெந்தப் பிராணியும் எப்பவும் ஏதோ ஒரு ஜோலியில் ஈடுபட்டுத்தானிருக்கிறது. பொழுது போகவில்லையே ன்னும் நிலை அதற்கில்லை, காலப்ரமாணத்தில் மிகச் சிறிய அளவைக்கூட அதன் முழுமைக்கு வாழ்வதனால், அதற்குப் பொழுது போதவில்லை. மனிதன் தான், மோவாயைக் கைக் கிண்ணத்தில் ஏந்திக் கொண்டு, காலைக் கால் மேல் மடித் துப் போட்டுக் கொண்டு, அல்லது, ஒடுக்கிக்கொண்டு, Rodin அப்படியே ஒரு சிலை வடித்து, அதையே காயமான கியாயமாகச் சாதித்துக் கொண்டு... . நான் இப்போது உணர்வது என் தனிமையையா வெறுமையையா! வானத்துத் தேமல் சிலவாகப்பூத்து விட்டது. ஆனால் என் கண்ணில் சதையால், பார்வையின் சிதைவில், எட்டாய் விண்டு தெரிகிறது. பூசணிபத்தைகள். முள்வேலியில் காட்டாமணிச் செடி, இடையிடையே பூவரசு, நுணா, ஒதிகை மரங்கள் நெருக்கமாக இலை பின்னிக் கொண்டு, நான் ஒரு குஞ்சுபோல், ராrஸ்க் கூட்டில் காத்திருக்கிறேன். எதற்கு? கொஞ்ச கே ர ம் மொட்டைமாடியில் காற்று வாங்குவோமா! ஏன் கனத்தடியில் ஏணி படிக்குப்படி முனகுகிறது.