பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடியில் எழுந்தருளி யிருக்கிறார். அங்கிருந்து அவர் செலுத்தும் ஆட்சி எங்களுக்குத் தெரியவில்லை. பாட்டிக் குத் தொந்தரவு கொடுக்கலாகாது எனக் குழந்தைகளுக்கு மூன்றாமாடிக்கு அனுமதி கிடையாது. அது அம்மா தவிர வேறு யாரும் அண்டக்கூடாத ப்ராகாரம். ஆறுகால பூஜை போல், அம்மா பாரி சரீரத்தைத் தூக்கிக்கொண்டு, குறைக் தது நாளைக்கு ஆறு தடவையாவது ஏறி இறங்குகிறார். பாட்டிக்கு ஆகாரம் தனியாய் அம்மாவேதான் சமைக்கிறார். அது கஞ்சியா, கூழா, புனர்ப்பாகமா, சாதமா-எதுவுமே எங்களுக்குச் சரியாத் தெரியாது. அதை ஒரு தட்டிலே, நிவேதனம் மாதிரி, இலையைப் போட்டு மூடித் தாங்கிக் கொண்டு, முகத்திலும் காலிலும் பளிச்சென பற்றிய மஞ்ச ளுடன், நெற்றியில் பதக்கம்போல் குங்குமத்துடனும், ஈரம் காயத்தளர முடிந்த கூந்தலில் சாமந்திக் கொத்துடனும் அம்மா மாடியேறுகையில் எனக்கு உடல் புல்லரிக்கிறது. சில சமயங்களில் அம்மா அப்பா இரண்டு பேருமே மேலே போய் ஒன்றாய்க் கீழிறங்கி வருகிறார்கள், ஸ்வாமி தரிசனம் பண்ணி வருவதுபோல். ஒரு சமயம் அவர்கள் அப்படி சேர்ந்து வருகையில் 'சடக் கென்று அவர்கள் காலடி யில் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டேன். அம்மா முகத் தில் ஒரு சிறு வியப்பும் கருணையும் ததும் புகின்றன. அப்பாவின் கன்னங்களில் இறுகிய கடினம்கூடச் சற்று நெகிழ்கிறது. "என்னடி குட்டீ, இப்போ என்ன விசேஷம்?" எனக்கே தெரிந்தால் தானே? உணர்ச்சிதான் தொண்டையை அடைக்கிறது; வாயும் அடைச்சுப் போச்சு. கன்னங்களில் கண்ணிர் தாரை தாரையாய் வழிகிறது. அன்புடன் அம்மா முகத்தில் புன்னகை தவழ்கின்றது. என் கன்னத்தைத் தடவிவிட்டு இருவரும் மேலே